சிபிஎம் மகிழ்ச்சி; வரவேற்பு! முதலமைச்சருக்கு நன்றி!
மாமேதை காரல் மார்க்ஸ்-க்கு சென்னையில் சிலை!
மாமேதை காரல் மார்க்ஸ் சிலை சென்னை யில் நிறுவப்படும் என்று தமிழக சட்டப்பேர வையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறி விப்பு வெளியிட்டு இருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மகிழ்ச்சியும், வரவேற்பும் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செய லாளர் பெ.சண்முகம் அறிக்கை ஒன்றை விடுத் துள்ளார். அதில் அவர்கூறியிருப்பதாவது: மார்க்சிய தத்துவ மேதை தோழர் காரல் மார்க்ஸ் அவர்களுக்கு சென்னையில் சிலை வைக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களி டம் கோரிக்கை வைத்திருந்தோம். அந்தக் கோரிக்கையை ஏற்று, தோழர் காரல் மார்க்ஸ் அவர்களுக்கு சென்னையில் சிலை வைக் கப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வியாழ னன்று (3.4.2025) அறிவித்துள்ளார். இந்த அறி விப்பை மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது. இந்த அறிவிப்பைச் செய்த தமிழ்நாடு முத லமைச்சர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி யினையும், பாராட்டுக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு பெ. சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.