ஒன்றிய அரசின் மக்கள் விரோத போக்கைக் கண்டித்து சிபிஎம் மக்கள் சந்திப்பு பிரச்சாரம்
புதுக்கோட்டை ஜுன் 22- ஒன்றிய அரசின் மக்கள் விரோத போக்கைக் கண்டித்தும், மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தியும், மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வுகாண வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை ஒன்றியத்தின் பல்வேறு ஊர்களில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் சந்திப்பு பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சாரத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் கே. செந்தில்ராஜ் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினரும், கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மா.சின்னதுரை கொடி அசைத்து தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஸ்ரீதர், டி.சலோமி உள்ளிட்டோர் பேசினர். ஒன்றியம் முழுவதும் நடைபெற்ற பிரச்சாரத்தில் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கறம்பக்குடியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தில் கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை பங்கேற்றார். திருமயம் ஒன்றியத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு பிரச்சாரத்திற்கு ஒன்றியச் செயலாளர் ஜெ.வைகைராணி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். ஜனார்த்தனன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ். பாலசுப்பிரமணியன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சி.ஜீவானந்தம், சிஐடியு நிர்வாகி எம்.ஏ.ரகுமான் உள்ளிட்டோர் பேசினர். கரூர் மாநகர குழு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாநகர குழு சார்பில் புலியூர் கடைவீதியில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. கிளை செயலாளர் பெரியசாமி தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டச் செயலாளர் மா. ஜோதிபாசு சிறப்புரையாற்றினார். கரூர் மாநகர செயலாளர் எம்.தண்டபாணி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.பி. ஜீவானந்தம், எம். சுப்பிரமணியன், கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். க.பரமத்தி ஒன்றியம் கட்சியின் க.பரமத்தி ஒன்றியக் குழு சார்பில், தென்னிலை கடை வீதியில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் குப்பம் கா. கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.முருகேசன், சி.ஆர். ராஜாமுகமது, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் கா.கந்தசாமி ஆகியோர் பேசினர். ஒன்றிய குழு உறுப்பினர் சண்முகம், கிளைச் செயலாளர் சேகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தோகைமலை ஒன்றியம் கட்சியின் தோகைமலை ஒன்றியக் குழு சார்பில் பேரூர் கடை வீதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்திற்கு கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர் எம். அழகேசன் தலைமை வகித்தார். கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஏ. சுப்பிரமணியன் பேசினர். கட்சி கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.