கோயம்புத்தூர், ஜன.4- சூயஸ் நிறுவனத்திடம் வழங்கப்பட்ட குடிநீர் விநியோக ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி கோவை மாநகராட்சி அலுவலகத்தை ஜனவரி 11 ஆம் தேதி பெருந்திரள் முற்றுகையிடுவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட மாநாடு முடிவு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் 23 ஆவது கோவை மாவட்ட மாநாடு மருதமலை பொதிகை மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன், பி.சம்பத், கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இதில் மதுரையில் நடைபெற உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டு பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக, இந்த மாநாட்டில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநி லக்குழு உறுப்பினர் கே.காமராஜ் உள்ளிட்ட 19 பேர் கொண்ட அமைப்புக்குழு மாநில செயற்குழுவால் அமைக்கப்பட்டது.
தீர்மானங்கள்
இரண்டு நாட்கள் நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு, பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கான இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும். இதுதொடர்பான வழக்கில் தேவையற்ற மேல்முறையீடுகளை அரசு செய்வதை கைவிட வேண்டும். அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் விடுபட்டுள்ள பேரூராட்சிகளை இணைக்க வேண்டும். கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் மேம்பாலப் பணிகள் காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆகவே, மேம்பாலப் பணிகளை விரைவுபடுத்தவும், அக்காலம் வரையில் மாற்றுப் பாதைகளை உருவாக்க வேண்டும். ஈசா யோகா மையத்தின் விதிமீறல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அத்தக்கூலிகளாக பணி யாற்றும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். மாதத்தின் குறிப்பிட்ட தேதியில் ஊதியம் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். நகர்ப்புறத்தில் சாலை வசதி உள்ளிட்டு நிறைவேற்றப்படும் அடிப்படை வசதிக்கான திட்டங்களை கிராமப்புறத்தையும் சமகாலத்தில் இணைப்பதற்கான பணிகளை செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. மேலும், கோவை மாநகரத்தின் குடிநீர் விநியோகத்திற்கான திட்டங்களை கோவை மாநகராட்சியே செய்ய வேண்டும். பன்னாட்டு சூயஸ் நிறுவனத்திடம் வழங்கி யுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலி யுறுத்தி ஜனவரி 11 ஆம்தேதி கோவை மாநகராட்சி அலுவல கத்தை பெருந்திரளாக முற்றுகையிடுவது. இந்த ஒப்பந்தத் தை ரத்து செய்கிற வரையில் தீவிரமான போராட்டத்தை முன்னெ டுப்பது என்றும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.