புதுக்கோட்டையில் ரூ.3 லட்சம் நிதி வழங்கல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டு நிதியாக கட்சியின் புதுக் கோட்டை மாவட்டக்குழு சார்பில் இரண்டா வது தவணையாக ரூ.3 லட்சம் வழங்கப் பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக்குழு சார்பில் அகில இந்திய மாநாட்டு நிதி முதல் தவணையாக ஏற்கனவே ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது. இந்நிலையில் சனிக்கிழமை புதுக்கோட் டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இரண்டா வது தவணையாக ரூ.3 லட்சம் வழங்கப் பட்டது. நிதியை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கத்திடம், மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் வழங்கி னார். மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாநிலக் குழு உறுப்பினர்கள் ஐ.வி.நாகராஜன், எம்.சின்னதுரை எம்எல்ஏ., மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கவிவர்மன், ஏ.ராமையன், கே.சண்முகம், கி.ஜெயபாலன், டி.சலோமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.