கண்ணூர், ஏப்.13- கண்ணூரில் நடந்த சிபிஎம் 23 ஆவது அகில இந்திய மாநாட்டில் பங்கேற்ற மூத்த பிரதிநிதி - 90 வயதான பாலோலி முகமதுகுட்டி. இளைய பிரதிநிதி 23 வயதான ஆர்யா ராஜேந்திரன். பாலோலி முகமதுக்குட்டி 1951லும், ஆர்யா ராஜேந்திரன் 2017-லும் கட்சியில் இணைந்துள்ளனர். மாநாட்டில் பங்கேற்றதில் முப்பது வயதுக்குட் பட்டவர்கள் ஏழு பிரதிநிதிகள், ஆறு பார்வையாளர்கள். 30க்கும் 39க்கும் இடையில் 21 பிரதிநிதிகள், எட்டு பார்வையாளர்கள். 40-49 வயது பிரிவில் 77 பிரதிநிதிகள் எட்டு பார்வையாளர்கள், 50-59 வயது பிரிவில் 217 பிரதிநிதி கள் 22 பார்வையாளர்கள், 60-69 வயது பிரிவில் 290 பிரதிநிதிகள், 24 பார்வையாளர்கள். 70 களில் 117 பிரதிநிதிகள் 8 பார்வையாளர்கள். அடக்குமுறைகளுக்கு எதிராகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் செங்கொடி ஏந்தி நடத்திய போராட்டத்தின் ஒரு பகுதியாக சிறை சென்ற 379 பேர் கட்சி மாநாட்டில் கலந்து கொண்டனர். 77 பார்வையாளர்களில் 25 பேர் சிறை சென்றவர்கள். அனைத்து பிரதிநிதிகளின் சிறைவாழ்க்கை 128 ஆண்டுகள்.
யூசுப் தாரிகாமி
காஷ்மீரை சேர்ந்த முகமது யூசுப் தாரிகாமி 6 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துள்ளார். மூவர் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப் பட்டனர். 12 பேர் இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை யிலும், 21 பேர் ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரையிலும் சிறையில் அடைக்கப்பட்டனர். மொத்தம் 692 பிரதிநிதிகள் சிறைவாசம் அனுபவித்தவர்கள். போராட்டத்தின் பகுதியாக, 151 பிரதிநிதிகள் தலை மறைவு வாழ்க்கைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. காந்தி கங்குலி நீண்ட காலமாக எட்டு ஆண்டுகள் ஆறு மாதங்கள் தலைமறைவாக இருந்துள் ளார். ஹிமான்ஷு தாஸ் கிட்டத்தட்ட ஆறு ஆண்டு களும், கணேஷ் சங்கர் சிங் மற்றும் அமல் ஹல்தார் ஐந்து வருடங்களுக்கு மேலாகவும் தலைமறைவாக இருக்க வேண்டியிருந்தது. பிரதிநிதிகள் அனைவரும் மொத்தமாக 109 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்துள்ளனர். தகுதி ஆய்வு படிவத்தில் முதன்முறையாக பாலினத்தில் ஆண்-பெண் என்பதோடு ‘மற்றவர்’ என்கிற தலைப்பு சேர்க்கப்பட்டுள்ளது. கூடுதலாக, சமூகப் பின்னணி பிரிவில் ‘மாற்றுத்திறனாளி’ என்ற தலைப்பும் சேர்க்கப்பட்டுள்ளது.
எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை, பிமன்பாசு
மாநாட்டில் மொத்தம் 729 பிரதிநிதிகளும் 78 பார்வை யாளர்களும் கலந்து கொண்டனர். பிரதிநிதிகளில் 94 பெண்கள். எஸ்.ராமச்சந்திரன் பிள்ளையும் பிமன் பாசுவும் அதிகபட்சமாக கட்சியின் 16 அகில இந்திய மாநாடுகளில் பங்கேற்றவர்கள். பாலோலி முகமதுகுட்டி, மாணிக் சர்க்கார், பி.மது, ஜனார்த்தன் பதி, என்.கே.சுக்லா, ஹரிசிங் காங் ஆகியோர் தலா 15 கட்சி காங்கிரஸில் கலந்து கொண்டனர். 170 பேர் முதல்முறையாக கட்சி காங்கிரசில் பங்கேற்றனர். பிரதிநிதிகளில் 137 பேர் தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், 207 பேர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த வர்கள். விவசாயத் தொழிலாளி - 51, ஏழை விவசாயி - 113, நடுத்தர விவசாயி - 154, பணக்கார விவசாயி - 27, நில உடமையாளர் - 10, முதலாளிகள் - 19, குட்டி முதலாளிகள் - 6. 143 பேர் 1990 க்கு பிறகு கட்சியில் சேர்ந்துள்ளனர். 1947 முதல் 63 வரை சேர்ந்தவர்கள் 14 பேர். 300 பேர் பட்டதாரிகள். 213 பேர் பட்டமேற்படிப்பு முடித்தவர்கள். தலித் சமூகத்தைச் சேர்ந்த 53 பிரதிநிதிகளும், ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்த 42 பிரதிநிதி களும் உள்ளனர். 38 பேர் கிறிஸ்தவப் பின்னணியி லிருந்தும், 55 பேர் முஸ்லிம் பின்னணியிலிருந்தும் பிரதிநிதிகளாக வந்திருந்தனர்.