மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு ஏப்.2 முதல் 6 ஆம் தேதி வரை மதுரையில் நடை பெறுகிறது. இதையொட்டி பல்வேறு மாவட்டங்களில் வரவேற்புக் குழு அமைப்புக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்தில் 24ஆவது அகில இந்திய மாநாட்டு வர வேற்பு குழு அமைப்பு கூட்டம் நடை பெற்றது. மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் சாமி.நடராஜன் சிறப்புரையாற்றினார்.
நகர செயலாளர் எ.இன்பராஜ், பெரம்பலூர் ஒன்றியச் செயலாளர் பி.பெரியசாமி, குன்னம் வி.செல்ல முத்து, வேப்பந்தட்டை கே.எம்.சக்திவேல், ஆலத்தூர் எஸ்.பாஸ்கரன், மின்னரங்கம் பி.பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.செல்லத்துரை, எஸ்.அகஸ்டின், எ.கலையரசி, எ.ரெங்கநாதன், ஏ.கே.ராஜேந்திரன், டாக்டர் சி.கருணாகரன் ஆகியோர் மாநாட்டு முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார்கள். மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்.கருணாநிதி, ஆர்.கோகுலகிருஷ்ணன், ஜி.கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர் இரா.எட்வின், ஆர்.ராமகிருஷ்ணன், ஆர்.மகேஸ்வரி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 100 பேர் கொண்ட வரவேற்பு குழு அமைக்கப்பட்டது. வரவேற்பு குழு தலைவராக டாக்டர் சி.கருணாகரன், செயலாளராக பி.ரமேஷ், பொருளாளராக எஸ்.அகஸ்டின், துணை தலைவர்களாக க.எ.கலையரசி, ஏ.கே.ராஜேந்திரன், துணை செயலாளர்களாக என்.செல்லத்துரை, எ.ரெங்கநாதன் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநாட்டு பேரணியில் பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து 3000 பேர் கலந்து கொள்வது, மாநாட்டிற்கு சென்னை யில் இருந்து கொண்டு வரப்படும் சிங்காரவேலர் நினைவு ஜோதிக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பாக வரவேற்பு அளிப்பது, மாநாட்டு செய்தி யினை பெரம்பலூர் மாவட்ட மக்களி டம் கொண்டு செல்லும் வகையில் கருத்தரங்கம், பிரச்சாரம், விளம் பரங்கள் செய்வது என முடிவு செய்யப் பட்டது.