போலிச்செய்திகளை பரப்பி வன்முறைக்கு தூண்டியதாக பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவ்க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டனம் தெரிவித்து விசாரணையை தள்ளிவைத்து உத்தரவு
கடந்த சில நாட்களாகவே புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய தவறான வந்திகள் பரவிய வண்னம் உள்ளன.அதிலும் குறிப்பாக பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவ் என்பவர் தமிழ்நாட்டில் இந்தி பேசியதற்காக 12 வட மாநில தொழிலாளர்கள் தூக்கிலிடப்பட்டதாகப் பொய்யான தகவலைப் பரப்பினர். பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்த அவர், பீகார் தொழிலாளர்கள் தாக்குதல்கள் நடந்தபோதிலும், தேஜஸ்வி யாதவ் ஸ்டாலினின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார் என்று பதிவிட்டிருந்தார். இதேபோல் பல தவறான தகவல்களை பரப்பி வந்ததால் அவர் மீது வழக்கு பதியப்பட்டு அதன் விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றது.
வடமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பாக பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவின் டிவிட்டர் பதிவால் நாடு முழுவதும் வன்முறை சூழல் ஏற்பட்டுள்ளது, அவருடைய செயல் கடுமையானது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டனம் தெரிவித்துள்ளாது.பிரசாந்த் உம்ராவின் ஜாமின் மனு மீதான விசாரணையை மார்ச்17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு.