tamilnadu

img

ரயில் விபத்தில் 6 பேரிடம் இதுவரை பேச முடியவில்லை: உதயநிதி

சென்னை, ஜூன் 5- “ஒடிசா ரயில் விபத்தில் பாது காப்பாக இருக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த அந்த 6 பேரிடம் இதுவரை பேச முடியவில்லை. இன்னும் இரண்டொரு நாளில் தெளிவான பதில் கிடைக்கும்” என்று தமிழக  இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தனியார் நிறுவனம் சார்பில் சென்னை மாநகராட்சிக்கு 10 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கும்  நிகழ்வு திங்களன்று (ஜூன் 5) நடை பெற்றது. இந்த நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.  பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், ஒடிசா ரயில் விபத்தில் தொடர்பு கொள்ள முடி யாத நிலையில் உள்ளவர்கள் குறித்து  கேட்கப்பட்ட கேள்விக்கு பதில ளிக்கையில், “ஒடிசாவில் இருந்து நான் கிளம்பும்போது, தமிழ்நாட்டை சேர்ந்த 8 பேர் குறித்து ஒரு தெளி வில்லாமல் இருந்தது. ஆனால், சென்னை வந்தவுடன் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினேன். அந்த  8 பேரும் பாதுகாப்பாகத்தான் இருக் கின்றனர். அதில் இரண்டு பேருடன் நேரடியாக பேசியாகிவிட்டது. மற்ற 6 பேரும் பாதுகாப்பாக உள்ளதாக, அவர்களுடன் பயணித்த பயணிகள் கூறியுள்ளனர். அதேபோல், அவர்கள் பயணித்த  ரயில் பெட்டிகளுக்கு பாதிப்பு ஏற்பட வில்லை என்பதும் தெரியவந் துள்ளது. ஆனால், அந்த 6 பேரிடம் இதுவரை பேசமுடியவில்லை. இன்னும் இரண்டொரு நாளில் தெளி வான பதில் கிடைக்கும்”என்றார்.