புதுச்சேரி, மார்ச் 5- புதுவையில் கலால், பொதுப் பணி, உள்ளாட்சி, காவல்துறை என அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெறுவதாகவும், ஊழல் ஆட்சி க்கு முதல்வர் ரங்கசாமி தலைமை யேற்று செயல்பட்டு வருவதாகவும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஒன்றிய, மாநில அரசு களை கண்டித்து பிரச்சார நடை பயணம் நடைபெற்றது. நடை பயணத்தை முன்னாள் முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்து பேசுகையில், நாட்டில் உள்ள 140 கோடி மக்களில் 40 சதவிதம் பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் வேலை யில்லா திண்டாட்டம் 10 சதவீதமாக இருந்தது. தற்போது 40 சதவீதமாக உயர்ந்துவிட்டது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கள் உயர்ந்துவிட்டன. மோடி ஆட்சியில் துறை முகங்கள், விமான நிலையங்கள், மின் விநியோக திட்டம், வீடுக ளுக்கு பைப் மூலம் சமையல் எரிவாயு கொடுக்கும் திட்டம், சூரிய மின் உற்பத்தி திட்டம் என 100க்கும் மேற்பட்ட திட்டங்கள் அதானியின் கைகளில் கொடுக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக ஆசிய அளவில் முதல் பணக்காரராகவும், உலக அளவில்3ஆவது பணக்காரரா கவும் இருந்தார். அதானி தன்னு டைய பங்குகளின் விலையை உயர்த்தி மக்களை ஏமாற்றி இருக்கிறார் என்று அறிவித்த பிறகு ரூ.12 லட்சம் கோடியை அவர் இழந்துள்ளார். புதுச்சேரியில் டுபாக்கூர் ஆட்சி நடைபெறுகிறது. என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரிக்கு அனைத்து திட்டங்க ளையும் கொடுப்போம்; கடனை தள்ளுபடி செய்வோம்; மாநில அந்த ஸ்தை கொடுப்போம்; சுற்று லாவை வளர்ப்போம்; கல்வியை தரம் உயர்த்துவோம்; வியாபா ரத்தை பெருக்குவோம் என்றெல் லாம் வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால் ஒன்று கூட நடக்கவில்லை. மாறாக கலால், பொதுப்பணி, உள்ளாட்சி, காவல்துறை என அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெறுகிறது. இந்த ஊழல் ஆட்சி க்கு முதல்வர் ரங்கசாமி தலையேற்று செயல்பட்டு வருகிறார். புதுச்சேரி யில் வளர்ச்சி இல்லை. பொதுத் துறை நிறுவனங்கள் மூடப்பட்டு இருக்கின்றன. மக்கள் நலத்திட்டங்கள் முடக்கப்பட்டுள் ளன. சாலைகள் குண்டும், குழியுமாக இருக்கின்றன. கஞ்சா, அபின் உள்ளி ட்ட போதை பொருட்கள் தாராள மாகக் கிடைக்கின்றன. புதுச்சேரியில் தடுக்கி விழுந் தால் மதுபானக்கடையில் தான் விழ வேண்டும். மாநிலம் முழுவதும் மது க்கடையை திறந்து புதுச்சேரி கலாச்சாரத்தையே ரங்கசாமி அழித்துவிட்டார். எனவே தான் இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மத்தியில் உள்ள மோடி ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என்று அவர் கூறினார்.