நாகர்கோவில், ஜுன் 5- நகை மதிப்பீட்டாளர்களுக்கு கொரோ னா கால நிவாரணம் வழங்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசு களால் 25 3 2020 முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இக்காலத்தில் அத்தியாவசிய பரிமாற்றத்தை கருத்தில் கொண்டு கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றி வரும் நகை மதிப்பீட்டாளர்கள் பணிநிரந்த ரம் இல்லாத நிலையில், மாத ஊதியம், கொரோனா ஊரடங்கு காலத்தில் நகை மதிப்பீட்டு கட்டணம் இல்லாமலும் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் அனை வரும் போதிய வருமானம் இன்றி தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்துக் கொள்ள வழி இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கி றார்கள். மாவட்ட எல்லைக்கு உட்பட்ட கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றும் நகை மதிப்பீட்டாளர்கள் அனைவருக்கும் மாதம் ரூ.15 ஆயிரம் நிவாரணமும் தினமும் வங்கிப் பணிக்கு வந்து செல்லும்போது ரூ.300 இதர மாவட்டங்களில் வழங்குவது போல படி வழங்கவும் மாவட்ட ஆட்சியர் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப் பட்டது. மாவட்ட தலைவர் கே தங்க மோகனன் தலைமையில் செயலாளர் குணசீலபதி பொருளாளர் சிதம்பரநாதன் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் அந்தோனி உள்ளிட்டோர் மனுவை ஆட்சியரிடம் அளித்தனர்.