மதுரை, ஜூன் 4- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்டத் தில் 40 இடங்களில் ஆர்ப்பாட் டம் நடத்த இடதுசாரிக் கட்சி கள் முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சி.இராமகிருஷ்ணன் வியாழ னன்று விடுத்துள்ள அறிக்கை: கொரோனா கால நிவாரண மாக ஒவ்வொரு குடும்பத்திற் கும் மத்திய அரசு ரூ.7,500-ம் மாநில அரசு ரூ.5,000 வழங்க வேண்டும் ரேசன் பொருட்கள் வழங்குவதை முறைப்படுத்த வேண்டும். மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து அட்டைதாரர் களுக்கும் 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும்.
இந்தத் திட் டத்தை பேரூராட்சி பகுதிகளுக் கும் விரிவுபடுத்த வேண்டும். சிறு, குறு தொழில்களை உடனடி யாகத் தொடங்கவும் ஊழியர் களுக்கு ஊதியம் வழங்கவும் எந்தவித நிபந்தனையுமின்றி ரூ .10 லட்சம் கடனாக வழங்க வேண்டும். வங்கிகளிலும், தனி யார் நிறுவனங்களிலும் வாங்கி யுள்ள கடன்களுக்கு உரிய வட்டி யை ஆறு மாதங்களுக்கு தள்ளு படி செய்ய வேண்டும். மின்சாரத்தை தனியாருக்கு கொடுக்கவும், மாநில அரசு களுக்கு மின்துறையின் மீதுள்ள அதிகாரத்தை தனியாருக்கு வழங்கவும், இலவச மின்சாரம் உள்ளிட்ட அனைத்து மானியங் களையும் ரத்து செய்யும் வகை யில் மின்சார சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்களை உடனடியாகக் கைவிட வேண் டும். புலம் பெயர் தொழிலாளர் களுக்கு தங்கள் சொந்த மாநி லங்களுக்குச் செல்ல உரிய ஏற் பாடுகள், அவர்களுக்கு உணவு, தங்குமிட வசதிகளை அரசு உறுதி செய்ய வேண்டும்.
மருத்துவ முதுநிலை பட்டப்படிப்பில் மத்திய அரசுத் தொகுப்பில் தமிழ்நாட்டின் இஒதுக்கீட்டு உரி மையை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். மாநில அரசு களுக்கு தேவையான நிதி மற் றும் கடன் நிபந்தனையின்றி வழங்க வேண்டும். சென்னை உட்பட தமிழ்நாட்டின் பலபகுதிகளில் கொரானா தொற்று அதிகரித் துள்ள நிலையில் பரிசோதனை களை அதிகப்படுத்தவேண்டும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவமனை மூலம் சிகிச்சை வழங்கவேண்டுமென்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்டத்தில் இடது சாரிக் கட்சிகள் இயக்கம் நடத்த திட்டமிட்டுள்ளன. இது தொடர்பான கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை புறநகர் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பா. ரவிச்சந்திரன் தலைமையில் வியாழனன்று நடைபெற்றது. சி.இராமகிருஷ்ணன், டி.ஏ. இளங்கோவன் (சிபிஎம்), பா. காளிதாஸ், ஓ.சுப்புக்காளை, சந்தானம், முத்துவேல் (சிபிஐ), பகத்சிங் சிபிஐ (எம்.எல்) லிபர சேன் ஆகியோர் கலந்துகொண் டனர். மதுரை புறநகர் மாவட் டத்தில் 40-க்கும் மேற்பட்ட மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது முடிவு செய்யப்பட் டுள்ளது.