tamilnadu

img

கொரோனா பாதிப்பு தெரு நாய்களுக்கு "தனிக்கவனிப்பு"

மதுரை, ஏப்.3-
கொரோனோவால் மதுரை மாவட்டத்தில் மக்கள் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர். இதனால் தெருவில் சுற்றித் திரியும் நாய்களுக்கு உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மனிதர்களால் கைவிடப்பட்டு தெருக்களில் வாழும் நாய்களுக்கு உணவு வழங்க மதுரை ஆட்சியர் டி.ஜி.வினய் உத்தரவிட்டார்.இதையடுத்து தெரு நாய்களைப் பாதுகாக்க 500 கிலோ நாய்களுக்கான உணவு பிராணிகள் நலம் பேணும் தன்னார்வலர்களிடம் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர், உதவி இயக்குநர் ன்.ஆர்.சரவணன் நோய் புலனாய்வுப் பிரிவு மருத்துவர் ஆர்.ஜெயகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.