மதுரை, மே 16- கொரோனாவை காரணம் காட்டி மதுரையில் சில கல்லூரிகள் ஈவு இரக்கமின்றி பேராசிரியர்கள், ஊழி யர்களுக்கு சம்பளத்தை வெட்டியுள் ளது. இந்த கொரோனா கால கொடுமை குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் விசாரிக்க வேண்டும். பேரிடர் காலமான கொரோனா காலத்தில் பணியாளர்களுக்கு ஊதி யம் வழங்குவதை நிறுத்தக்கூடாது. ஏற்கனவே வழங்கப்பட்டுவந்த ஊதி யத்தை குறைக்காமல் முழு ஊதியம் வழங்க வேண்டும் என்று அரசு உத்தர விட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக்குழு வின் பரிந்துரைப்படி சுயநிதிப்பிரிவு ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 25,000 ஊதியம் வழங்க வேண்டும். ஆனால் மிகமிகக் குறைந்த அள விலேயே சுயநிதிப்பிரிவில் பணிபுரி யும் ஆசிரியர்கள் ஊதியம் பெற்று வரு கின்றனர். அவ்வாறு பெறும் சொற்ப ஊதியத்தையும் மதுரை நாகமலை நாடார் மஹாஜன சங்கம் ச வெள் ளைச்சாமி நாடார் கல்லூரி, தியாக ராசர் கலைக்கல்லூரி ஆகியவை அரசு உத்தரவுக்கு எதிராக செயல்பட்டுள் ளன.
இந்தப் பேரிடர் காலத்தில் சம்ப ளத்தை முழுமையாக வழங்க வில்லை. நாடார் மஹாஜன சங்கம் ச. வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் அரசு உதவி பெறும் பிரிவில் 83 பேரா சிரியர்கள் 28 அலுவலகப் பணியா ளர்கள் உள்ளனர். இவர்களுக்கு ஏப் ரல் மாத ஊதியம் இன்னும் வழங்க வில்லை. மதுரை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் தொடர்ந்து வலியுறுத்தியும், கல்லூரி நிர்வாகம் ஊதியப்பட்டியலை வேண்டுமென்றே அனுப்பாமல் ஆசிரியர்-அலுவலர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதனால் முத லமைச்சர் நிவாரண நிதிக்கு சென்றி ருக்க வேண்டிய ஒருநாள் ஊதியமும் கூட தடைப்பட்டுள்ளது.
நாடார் மஹாஜன சங்கம் ச. வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் பணியாற்றும் கல்லூரியின் சுயநிதிப் பிரிவில் பணியாற்றும் 170 ஆசிரியர் அலுவலர்கள் ஏற்கனவே பெற்று வந்த சொற்ப ஊதியத்தில் 30 சத வீதம் முதல் 50 சதவீதம் ஊதியம் வெட் டப்பட்டுள்ளது. பேராசிரியர்களுக்கு சராசரியாக 60 சதவீதமும் அலுவலர் களுக்கு சராசரியாக 70 சதவீதமும் ஏப்ரல் மாத ஊதியத்தில் குறைத்து, அதையும் கூட கடந்த மே 5-ஆம் தேதி வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 30 நாட்களும் பணிக்கு வந்து எட்டு மணி நேரம் என்ற வழக் கத்திற்கு மாறாக 12 மணி நேரம் கட் டாயப்பணியாற்றிய காவலர்கள் மற்றும் தோட்டப்பணியாளர்களுக் கும் 30 சதவீத ஊதியம் வெட்டப்பட்டு 70 சதவீத ஊதியமே வழங்கப்பட் டுள்ளது. மதுரை தியாகராசர் கலைக் கல் லூரியில் சுயநிதிப் பிரிவில் பணி யாற்றும் ஆசிரியர் மற்றும் அலுவ லர்களுக்கு 25 சதவீதம் மற்றும் 50 சத வீதம் ஊதியம் வெட்டப்பட்டு சராசரி யாக 60 சதவீத ஊதியமே அளிக்கப் பட்டுள்ளது.
மிகக் குறைந்த ஊதி யமே பெற்றுவந்த சுயநிதிப்பிரிவு ஆசிரியர்கள் இந்த ஊதிய வெட் டால் அன்றாட வாழ்க்கைக்குக் தேவை யான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதகே இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். நாடார் மஹாஜன சங்கம் ச வெள் ளைச்சாமி நாடார் கல்லூரி மற்றும் மதுரை தியாகராசர் கலைக் கல்லூரி நிர்வாகங்களின் அரசு விரோத, ஆசி ரியர்-அலுவலர் விரோதப்போக்கிற்கு கல்லூரி ஆசிரியர்கள் சங்கமான மூட்டா கடும் கண்டனம் தெரிவித் துள்ளது. மேலும் இந்த நிர்வாகங்கள் அரசு உத்தரவை மதித்து உடனடியாக சுய நிதி ஆசிரியர்களிடமிருந்து வெட்டப் பட்ட ஊதியத்தை வழங்க வேண்டும் என மூட்டா வலியுறுத்தியுள்ளது. உலகளாவிய பேரிடர் காலகட்டத் தில் அரசு விதிகளுக்கு மாறாக செயல் படும் நிர்வாகங்கள் மீது மதுரை மாவட்ட நிர்வாகம், உயர்கல்வித் துறை, மண்டலக் கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் உடனடியாக தலை யிட்டு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மூட்டா கேட்டுக்கொண்டுள்ளது.
ஆசிரியர் அலுவலர்களின் வாழ்வாதாரமாக இருக்கும் ஊதி யத்தை உடனடியாக வழங்கவேண் டும். சுயநிதிப்பிரிவு ஆசிரியர்களுக்கு வெட்டப்பட்ட ஊதியத்தை அந்த ஆசி ரியர்களுக்கு உடனடியாக கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் கல்லூரி நிர்வாகங்கள் அரசு உத்தரவுகளை அமல்படுத்துவதற்கும் இதுபோன்ற நிகழ்வுகள் தொடராமல் இருப்ப தற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரி நிர்வாகங்கள் மாண வர்-ஆசிரியர் அலுவலர் விரோ தப்போக்கைத் தொடருமானால் ஒன்று பட்ட போராட்டங்களை நடத்துவோம் எனவும் மூட்டா தெரிவித்துள்ளது. இந்தத் தகவல்களை மூட்டா பொருளாளர் ஏ.டி.செந்தாமரைக் கண்ணன் தெரிவித்துள்ளார்.