‘கம்யூனிச’ பூதம் திரும்ப எழுகிறது! இந்த முறை அது உலகின் அனைத்துக் கண்டங்களிலும், நம்பிக்கையை விதைக்கும் வண்ணமாக எழத் தொடங்கி யுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன், உலகின் இடதுசாரி பதிப்பாளர்கள் ஒன்று கூடி னார்கள். ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’ வெளியான பிப்ரவரி 21 ஆம் நாளை, சிவப்பு புத்தகங்கள் தினமாக கடைப்பிடிப்பது என்று முடிவு செய்தார் கள். அதன்படி, அடிப்படை கம்யூனிச நூல்கள், லட்சக்கணக்கான பிரதிகள் விநியோகிக்கப் படுவதும், கூடி வாசிக்கப்படுவதும் ஒரு கொண்டாட்டமாகவே நடக்கிறது. 2020 ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் பிரதிகள் ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ விநியோகிக்கப்பட்டது. மிகப் பரவலாக, கிராமங்கள் முதல் நகரங்கள் வரை வாசிப்புக் கூட்டங்கள் நடந்தன. பிறகு கொரோனா பரவல் இந்த கொண்டாட்டங்களை பாதித்தது. ஆனால், அந்த சூழல் சிவப்பு நூல்களுக்கான தேவையை அதிகரித்துவிட்டது.
கடந்த 3 ஆண்டுகளில், உலகத்தின் கவனம் சோசலிசத்தை நோக்கி கூடுதலாக திரும்பி யிருப்பதை யாரும் மறுக்க முடியாது. கொரோனா பெருந்தொற்றை எதிர்கொண்ட விதம் முதலாளித்துவத்தை அம்பலப்படுத்தி விட்டது. மனிதர்களின் நலவாழ்வை பின்னுக்கு தள்ளி, லாப வெறியை முதன்மைப்படுத்தும் போக்குகளை மக்கள் வெறுக்கிறார்கள். நெருக்கடி, மேலும் மேலும் நெருக்கடி என்று குறுகிய கால இடைவெளியில் அடுத்தடுத்த பொருளாதார நெருக்கடிகள் நம்மைச் சூறா வளியாக தாக்குகின்றன. மறுபக்கத்தில் சோசலிச நாடுகள், மக்கள் நலவாழ்வை முதன்மைப்படுத்தி செயல்படுவதுடன், பொரு ளாதாரச் சுழல்களையும் வெற்றிகரமாக எதிர் கொள்கின்றன. எனவே, சிவப்பு புத்தகங் களின் வாசிப்பு, மிக அவசியமான அரசியல் செயல்பாடாகவும் இருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் முன்னுரை களை கூர்ந்து வாசிப்பவர்களுக்கு இது வர லாற்று உண்மை என்பதை உணர முடியும்.
வாசிப்பும், புரட்சிகர மாற்றமும்
கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியான காலத்தில் அது சில மாதங்களிலேயே முதல் பதிப்பு விற்றுத்தீர்ந்து, இரண்டாவது பதிப்பு அச்சடிக்கப்பட்டு அதுவும் விற்றுத்தீர்ந்த பின் மூன்றாவது பதிப்பைக் கண்டது. அந்த காலகட்டத்தில் நடைபெற்ற ஜூன் எழுச்சி, முதலாளித்துவ வர்க்கத்திற்கும், பாட்டாளி வர்க்கத்திற்கும் இடையிலான மாபெரும் போராக அமைந்தது. பிறகு 1848 ஆம் ஆண்டில் பாரிஸ் எழுச்சிக்கு ஏற்பட்ட தோல்வியின் காரணமாக ஏற்பட்ட தொய்வு கம்யூனிஸ்ட் அறிக்கை ‘கேட்பாரற்று அழியும்’ தோற்றம் ஏற்பட்டது என்கிறார் ஏங்கெல்ஸ். ஆனால், அந்த தோற்றம் தற்காலிகமானதே; அறிக்கை வெளியான கால் நூற்றாண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட சூழல், வாசிப்பில் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து 6 மொழிகளில் 9 பதிப்புகள் வெளியாகின. 1882 ஆம் ஆண்டில் ரஷ்ய மொழியில் இந்த புத்தகம் வெளியானது. அதாவது 34 ஆண்டுகள் கழித்து இது நடந்தது. ரஷ்யாவில் புரட்சிக்கு முன் 70 பதிப்புகள் அச்சடிக்கப்பட்டன. பல்வேறு பிர தேச மொழிகளில் 35 பதிப்புகள் வெளிவந்தன.
புரட்சிகர இயக்கத்தின் வீச்சிற்கும், நூல் வாசிப்புக்கும் உள்ள நேரடியான தொடர்பினை மேற்சொன்ன விபரங்கள் எடுத்துக்காட்டு கின்றன. இந்த விபரங்கள் கம்யூனிஸ்ட் அறிக் கையின் முன்னுரைகளில் இடம்பெற்றிருக் கின்றன. பாட்டாளி வர்க்கப் புரட்சியின் விளைவாக சோவியத் ஒன்றியம் உருவானதை அறிவோம். அங்கே ஏற்பட்ட புரட்சிகரமான மாற்றங்கள் சிவப்பு புத்தகங்களின் வழியாக உலகமெங்கும் சென்றடைந்தன. அதே போல சோவியத் ரஷ்யா உட்பட சோசலிச நாடுகளுக்கு ஏற்பட்ட பின்ன டைவும் சிவப்பு புத்தகங்களின் பரவலில் தாக்கம் செலுத்தின. சோவியத் பின்னடைவால் ஏற்பட்ட குழப்ப நிலைமையை பயன்படுத்திக் கொண்டு கம்யூனிச வெறுப்புக் கருத்துக்கள் பரவலாக விதைக்கப்பட்டன. ஆனால், ஆதவனை புழுதி மேகங்களால் இன்னும் எத்தனை காலம்தான் மறைத்திட முடியும்?. அது சாத்தியமே இல்லை என்பதை சிவப்புப் புத்தக வாசிப்பு எடுத்துக் காட்டுகிறது.
விஞ்ஞான சோசலிசம்
இப்போது மூன்றாவது ஆண்டாக உலகின் எல்லாத் திசைகளிலும் சிவப்புப் புத்தகங்கள் வாசிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் இந்த முறை மாமேதை ஏங்கெல்ஸ் எழுதிய ‘கற்பனா வாத சோசலிசமும், விஞ்ஞான சோசலிசமும்’ என்ற நூலை ஆயிரம் மையங்களில் வாசித்து, விவாதிப்பது என்ற முடிவை பாரதி புத்தகாலயம் முன்னெடுக்கிறது. பல்வேறு இடது சாரிக் குழுக்களும் அதற்கான தயாரிப்புப் பணி களில் ஈடுபட்டுவருகிறார்கள். இந்த புத்தகம் 1880 ஆம் ஆண்டில், பிரெஞ்சு சோசலிஸ்டுகள் கேட்டுக்கொண்ட அடிப்படை யில் தோழர் ஏங்கெல்சால் தொகுத்து அளிக்கப் பட்டது. 1883 ஆம் ஆண்டில் ஜெர்மன் மொழி யிலும் பிறகு இத்தாலிய, ருஷ்ய, டேனிஷ், டச்சு மொழிகளில் என 10 மொழியாக்கங்களை கண்டது. 1892 ஆம் ஆண்டில் வெளியான ஆங்கில நூலுக்கு எழுதிய முன்னுரையில், “வேறு எந்த சோசலிச நூலும், 1848-ஆம் ஆண்டின் எங்களுடைய கம்யூனிஸ்டு அறிக்கை அல்லது மார்க்சின் மூலதனம் நூலேகூட இவ்வளவு அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளனவா என்பது எனக்குத் தெரிய வில்லை” என்று குறிப்பிட்டுள்ளார் ஏங்கெல்ஸ். அப்போது ஜெர்மனியில் மட்டும் இந்த புத்தகம் 20 ஆயிரம் பிரதிகள், 4 பதிப்புகள் கண்டது. மனிதர்களை மனிதர்கள் சுரண்டும் முறைக்கு முடிவுகட்ட வேண்டும் என்ற விருப்பம் காலம் காலமாகவே இருந்து வரு கிறது. ஆனால், அதனை சாத்தியமாக்குவது எது? நல்ல நோக்கங்களை பிரச்சாரம் செய்தால் போதுமா? சில தனிநபர்கள் முயற்சியின் மூலம் முன்னேற்றங்களை உருவாக்கிட முடியுமா? தத்துவ ஞானிகளின் பிரசங்கங்களுக்கும், மார்க்சியத் தத்துவத்திற்கும் என்ன வேறு பாடு? இந்த சமுதாயத்தை முன்னோக்கி செலுத்தக்கூடிய சக்தி எது? கடந்த காலங்களில் வாழ்ந்த சில நல்ல மனிதர்கள், அவர்களு டைய உயர்ந்த விருப்பங்களை சாத்தியப் படுத்த முடியாமல் போனது ஏன்? மார்க்சியத் தத்துவம் அதிலிருந்து பெற்றுக்கொண்டது என்ன? தனித்து நிற்பது எப்படி? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் கொடுக்கும் ஆழமான புத்தகமாக இது அமைந்திருக்கிறது.
விடுதலை சாத்தியமே !
தோழர் ஏங்கெல்சின் காலத்தில் பரவலாக நிலவிய முதலாளித்துவ சிந்தனைகள், சோசலிச விருப்பங்களை இந்த நூல் விளக்கு கிறது. ஆனால் அந்த கருத்துக்கள் அன்றைய காலத்தோடு முடிந்து போவதாக இல்லை. அவற்றின் சாயலை நாம் சமகால அரசியலிலும் புரிந்துகொள்ள முடிகிறது. முதலாளித்துவ சுரண்டலையும், முதலாளித்துவத்திற்கு முன்பு நிலவிய பல்வேறு அடிமை நிலைகளையும், படிநிலை சமுதாய அமைப்பினையும் உட்பட அனைத்தையும் ஏங்கெல்ஸ் விமர்சிக்கிறார். அவற்றின் அடிப்படைகளையும், வளர்ச்சிப் போக்குகளையும் எடுத்துச் சொல்கிறார். மேலும் இந்த புத்தகத்தின் மூன்றாவது அத்தியா யம், சோசலிசத்தின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கையை உருவாக்குவதாக அமைந்துள்ளது. சிறு அளவில், தனி நபர்கள் மேற்கொண்ட உற்பத்தியும், அதற்காக உருவாக்கப்பட்ட சிறு சிறு கருவிகளும், மெல்ல மெல்ல வளர்ச்சி யடைந்து கூட்டாக உழைப்பதும், பின் அந்த நிலைமையில் இருந்து முதலாளித்துவ உற்பத்தி அமைப்பும், வேலைப் பிரிவினை களும் உருவாவதும் எப்படி? … உற்பத்தியை நாம் சமுதாயமாக இணைந்தே மேற்கொள் கிறோம்; ஆனால் லாபம் எப்படி தனியொரு வரின் உடைமையாக ஆகிறது? வேலை யில்லாத பெரும் எண்ணிக்கையிலான மக்களை உருவாக்கும் இதே சமுதாயம், வேலையற்ற சோம்பேறி ‘முதலாளிகளை யும்’ படைப்பது எப்படி? - என்கிற கேள்வி களுக்கெல்லாம் ஆழமான விடைகளை இந்த நூல் தருகிறது.
மனிதனை மனிதன் சுரண்டும் அமைப்பிற்கு முடிவு கட்டினால் மட்டுமே, ஒட்டுமொத்த மனித குலத்தின் விடுதலை சாத்திய மாகும், அது நாள் வரையில் நிலவிவந்த ‘விலங்கு’ நிலைமையை மாற்றி, ‘இயற்கையின் தனிச்சிறப்பான உயிரினமாக’ மனிதர்கள் மாறுவார்கள் என்ற நம்பிக்கையை இந்த சிவப்புப் புத்தகம் வழங்குகிறது. சிவப்புப் புத்தக வாசிப்பை பரவலாக்கு வதும், முன்னெடுப்பதும், தவிர்க்கவே முடி யாத ஒரு புரட்சிகரச் செயல்பாடு. எனவே நாம் சிவப்புப் புத்தகங்களை கொண்டாடுவோம். ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் விடுதலை லட்சியத்தை முன்னெடுப்போம்.