tamilnadu

img

சிபிஎம் அலுவலகம் வந்த காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில்

திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில், ‘இந்தியா’ கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணனை மாநிலக்குழு அலுவலகத்தில் சந்தித்தார். அப்போது அவரை வரவேற்ற கே. பாலகிருஷ்ணன் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பெ. சண்முகம், மாநில கட்டுப்பாட்டு குழுத் தலைவர் பி. சுந்தரராஜன், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், செயற்குழு உறுப்பினர் ஜி. சம்பத், முன்னாள் மாவட்டச் செயலாளர் செல்வராஜ், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் ஏ.ஜி. சிதம்பரம் ஆகியோர் உடனிருந்தனர்.