tamilnadu

அரசு கல்வித்துறையின் புதிய செயலி மூலம் சம்பளம் ஏற்றுவதில் குழப்பம்: ஆசிரியர்கள் அலைக்கழிப்பு

தூத்துக்குடி, ஆக.7- திருச்செந்தூர் கல்வி மாவட்டத்தில் தொடக்க, நடுநிலைப்ளி மற்றும் உயர், மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் அவர்களது வங்கி கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டு வந்தது. கடந்த ஜூன் வரை அனைத்து ஆசிரியர்களுக் கும் பழைய முறையான இ.சி.எஸ் முறைப்படி சம்ப ளம் ஏற்றப்பட்டது. இதன் மூலம் சம்பளம் மாதந்தோ றும் அவர்களது வங்கி கணக்கில் வரவு ஆகி வந்தது. இந்நிலையில் தமிழக அரசு ஜூலை மாத சம்பளம் கல்வித்துறையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஐ.எப்.ஹெச்.ஆர். எம்.எல் என்ற புதிய செயலி மூலம் தான் சம்பளம் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இத னால் சம்பளம் வழங்கப்படு வது தாமதம் ஆகும் எனவும், ஆதலால் தெளிவுப்படுத்தி, அதற்கான பயிற்சி அளித்து புதிய செயலி மூலம் சம்பளம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட நிர்வாகிகள், ஆட்சியரிடம் புகார் செய்தனர்.

இந்நிலையில் திருச் செந்தூர் கல்வி மாவட்டத்தில் மேல்நிலைப்பல்ளி ஆசிரியர் களுக்கு மட்டும் ஜூலை மாத சம்பளம் அவரது கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் வட்டாரத்தில் தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. திருச் செந்தூர் உள்ளிட்ட பிற வட் டாரங்களில் சிலருக்கு சம்ப ளம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக கல்வித்துறை செயலி குறித்து மாவட்ட கல்வி அலு வலகம், வட்டார கல்வி அலு வலகம் மற்றம் கருவூல அதி காரிகளுக்கு கொரோனா தடுப்பு பணி காரணமாக அதற்கான பயிற்சி அளிக்கப் படவில்லை. இதனால் எவ்வாறு சம்ப ளம் பரிவேற்றம் செய்வது என குழப்பத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் தொடக்க, நடு நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சம்பளம் குறித்து மாவட்ட கருவூல அலுவலகத்திற்கு சென்றால் வட்டார கல்வி அலுவலகத்து க்கு செல்லுமாறும், இதை  போல் வட்டார கல்வி அலுவ லகத்துக்கு ஆசிரியர்கள் சென்றால் மாவட்ட கருவூல கத்துக்கு செல்லுமாறு அறி வுறுத்தப்படுவதாக ஆசிரி யர்கள் தரப்பில் புகார் தெரி விக்கப்பட்டுள்ளது.

இந்த செயலி மூலம் சம்ப ளம் ஏற்றப்படுவது குறித்து மாவட்ட கருவூலக அலுவல கத்தில் இருந்து கணக்கு முறையாக வட்டார கல்வி அலுவலர்களுக்கு தாக்கல் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. ஆசிரியர்க ளுக்கு மாத கடைசியில் சம்பளம் அவரது வங்கி வரவு ஆகிவிடும். ஆனால் தற்போது புதிய செயலி மூலம் சம்பளம் ஆக.4 ஆம் தேதி ஆகியும் ஏற்றம் செய்யப் படாமல் தாமதம் ஆகி வருவ தால் ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுவதுடன் அதிருப்தியும் தெரிவித்துள் ளனர். இந்த புதிய செயலியால் சம்பளம் ஏற்றுவது குழப்பம் ஏற்பட்டு தாமதம் ஏற்படும் என ஏற்கனவே மாவட்ட ஆட்சியருக்கு புகார் தெரி வித்துள்ளோம். ஆதலால் மாவட்ட நிர்வாகம் இதனை கவனித்து கொரோனா நேரத்தில ஆசிரியர்கள் அலைக்கழிக்கப்படாமல் உட னடியாக சம்பளம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.