tamilnadu

img

பறிமுதல் செய்த செல்போன்களை செய்தியாளர்களிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், பத்திரி கையாளர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை ஒப்படைக்க சிறப்பு புலனாய்வு குழுவுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின்  முதல் தகவல் அறிக்கை வெளியான வழக்கில், விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளர்களை துன்புறுத்தக் கூடாது  என சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உத்தர விடக் கோரி தமிழ் ஜனம் செய்தியாளர் தாமோதரன் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர் மன்றம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது பத்திரிகையாளர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் ஜோதிமணியன், கே.பாலு, இளங்கோவன், அருண் ஆகியோர் ஆஜராகி, “இந்த வழக்கிற்கு எந்த சம்பந்த மும் இல்லாமல் 56 கேள்விகளை சிறப்பு  புலனாய்வுக் குழு கேட்டுள்ளது. அவை பத்திரிகையாளர்களின் அடிப்படை உரி மையை மீறும் வகையில் உள்ளதாகவும், ஊடகத்தினருக்கு தடை விதித்தால் ஜன நாயகம் இருக்காது” எனவும் தெரிவிக்கப் பட்டது.

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறி ஞர் முகிலன், “பத்திரிகை சுதந்திரத்தை தடை செய்யவில்லை. சம்மன் மட்டுமே  அனுப்பப்பட்டு, விவரங்கள் கேட்கப்பட்டு உள்ளன. பத்திரிகையாளர்களை துன்புறுத்தும்  எண்ணம் இல்லை. எந்த அச்சமும் கொள்ளத் தேவையில்லை” என்றார்.

இதையடுத்து, பத்திரிகையாளர்களிடம் தனிப்பட்ட விவரங்களை ஏன் கேட்கிறீர்கள்? முதல் தகவல் அறிக்கையை இணையதளத் தில் பதிவேற்றம் செய்தது யார்? என நீதிபதி  இளந்திரையன் கேள்வி எழுப்பினார். 

மேலும், விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளர்களை துன்புறுத்தக் கூடாது  எனவும், அவர்களின் செல்போன்களை, விசாரணைக்குப் பின் திரும்ப ஒப்படைக்க வும் சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு உத்தர விட்ட நீதிபதி, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என பத்திரிகையாளர்களுக்கு அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்தார்.