tamilnadu

img

41 மாத கால பணிநீக்க காலத்தை பணிக் காலமாக உறுதி செய்திடுக!

41 மாத கால பணிநீக்க காலத்தை  பணிக் காலமாக உறுதி செய்திடுக! ஜூன் 12 - சாலைப் பணியாளர்கள் போராட்டம்

திண்டுக்கல், மே 14- 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்  காலமாக உறுதி செய்திட வலியுறுத்தி யும், சென்னை உயர்நீதிமன்ற உத்த ரவை அமலாக்க வலியுறுத்தியும், தீர்ப்புக்கு மாறாக தமிழக அரசு மேல் முறையீடு செய்வதை தவிர்த்திட கோரி யும் ஜூன் 12 அன்று கண்ணில் கருப்புத் துணி கட்டி சாலைப் பணியாளர்கள் தமிழகம் தழுவிய போராட்டம் நடத்த உள்ளனர். தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்க மாநில செயற் குழு கூட்டம் புதனன்று திண்டுக்கல் தமிழ் நாடு சாலை ஆய்வாளர் சங்க கட்டி டத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு  மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணி தலைமை வகித்தார். மாநிலச் செயலா ளர் செ.சையது யூசுப்ஜான் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். திண்டுக் கல் மாவட்டத் தலைவர் முருகேசன் வரவேற்றார். மாநில துணைத் தலை வர்கள் ச.மகேந்திரன், கு.பழனிச்சாமி, கா.ரவி, தி.ராஜமாணிக்கம், மாநிலச் செயலாளர்கள் செந்தில்நாதன், கோ. ஹரிபாலகிருஷ்ணன், செ.சையதுயூசுப் ஜான் ஆகியோர் முன்னிலை வகித் தனர். இந்த கூட்டத்தில், சாலைப் பணி யாளர்களின் 41 மாத பணி நீக்க  காலத்தை பணிக்காலமாக முறைப் படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் சங்கத்தின் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கில், 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக உறுதி செய்திட வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கின் தீர்ப்பை அமலாக்குவதாக இருந்த நிலையில், தற்போது தமிழக அரசு உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதி ராக மேல்முறையீடு செய்துள்ளது. இது  நியாயமற்றது.  மேல்முறையீடு செய்வதை கை விட்டு உத்தரவை அமலாக்க தமிழக  அரசு முன்வர வேண்டும் என்று வலி யுறுத்தி தமிழ்நாடு முழுவதும் கோட்ட பொறியாளர் அலுவலகங்கள் முன்பாக ஜூன் 12 ஆம் தேதி கருப்புத்  துணியை கண்ணில் கட்டி கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இந்த போராட்டத்தில், தமிழ்நாடு முழுவதும் உள்ள சாலைப் பணியாளர்கள் திர ளாக பங்கேற்பார்கள் என்று மாநில பொதுச் செயலாளர் அம்சராஜ் செய்தி யாளர்களிடம் தெரிவித்தார். இதில் மாநிலத் தலைவர் பால சுப்பிரமணி, பொருளாளர் தமிழ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.