மதுரை, அக்.8- கிராம நிர்வாக அதிகாரி இடமாறுதல் கலந்தாய்வை பழைய முறைப்படி நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கன்னியாகுமரியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் உயர்நீதி மன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடுத் துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், கன்னி யாகுமரி மாவட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறேன். நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் கிராம நிர்வாக அதி காரி இடமாறுதல் கலந்தாய்வு முறையாக நடைபெறவில்லை. வருவாய்த்துறை அர சாணை எண்:515 நாள்25.08.2008-இன் படி முறையாக கிராம நிர்வாக அதிகாரி இடம் மாற்றுதல் கலந்தாய்வு நடைபெறவில்லை.எனவே பழைய முறைப்படி முறையாக நடத்த உத்தரவிட வேண்டும் என்று தெரி வித்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு சனிக்கிழ மையன்று நடைபெற்றது. பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், வருவாய்த்துறை அரசாணை எண்:515 நாள்25.08.2008-இன் படி கிராம நிர்வாக அதிகாரி இடமாறுதல் கலந்தாய்வு “ஏ” பிரிவு மற்றும் “பி” பிரிவு என நடைபெறும். ஆனால், நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் பகுதிகளில் கிராம நிர்வாக அதிகாரி இடமாறுதல் கலந் தாய்வு “ஏ” பிரிவு, “பி” பிரிவு மற்றும் இரண்டு பிரிவுகளையும் சேர்த்து பொதுவான கலந் தாய்வு என 3 வகைகளாக பிரிக்கப் பட்டுள்ளது. இது அரசாணைக்கு எதிரா னது. எனவே, பழைய முறைப்படி கிராம நிர்வாக அதிகாரி இடமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.