நாகர்கோவில், மே 19-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழரும்,சுதந்திர போராட்ட வீரரும், தாய்தமிழக இணைப்பு போராளியுமான வடக்கு தாமரைக்குளம் தோழர் ஆர். சோமசுந்தரம் (96) சனியன்று காலமானார். அவரது உடல் நல்லடக்கம் ஞாயிறன்று நடைபெற்றது. முன்னதாக அவரது இல்லத்தில் கட்சியின் சார்பில் இரங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. அகஸ்தீஸ்வரம் வட்டாரக்குழு உறுப்பினர் ரெகுநாதன் தலைமை தாங்கினார். மாநிலசெயற்குழு உறுப்பினர் நூர்முகமது, மாவட்ட செயற்குழுஉறுப்பினர் என்.முருகேசன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அர்ஜுனன், அகஸ்தீஸ்வரம் வட்டார செயலாளர் எஸ்.எஸ்.சந்திரன் ஆகியோர் இரங்கல் உரையாற்றினர். இதில்மாவட்டசெயற்குழு உறுப்பினர்கள் என்.உஷா. அகமது உசேன். என்.எஸ்.கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் அந்தோணி, மலைவிளைபாசி,வட்டார செயலாளர்கள் மோகன், மிக்கேல், ராஜகுமார், தூத்துக்குடி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா, எழுத்தாளர் பொன்னீலன், கொடிக்கால் ஷேக்அப்துல்லா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இசக்கிமுத்து, உட்பட பலர் கலந்துகொண்டனர்.