மதுரை, மே 18- அரசுப் போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாவட்டத் தலைவர் கே.வி.குரு சாமி காலமானார் தமிழ்நாடு அரசு போக்கு வரத்துத் தொழிலாளர் ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநில உதவிச் செயலாளர், மதுரை மண் டல அமைப்பின் தலைவர் பொறு ப்பை வகித்து வந்த தோழர் கே.வி. குருசாமி (69) ஞாயிறு நள்ளிரவு மாரடைப்பு காரணமாக மதுரை பெத்தானியாபுரத்தில் உள்ள அவ ரது இல்லத்தில் காலமானார். இவர் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் உறுப்பினர்.
அரசு போக்குவரத்து தொழிலாளர் சங் கத்தின் (சிஐடியு) மாநில சம்மேள னக்குழு உறுப்பினர், மதுரை சங்கத் தலைவர் ஆகிய பொறுப்பு களை ஏற்று திறம்படப் பணியாற்றி யவர். 2001-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் போனஸ் போராட் டத்தின் போது கைது செய்யப் பட்டு 15 நாள் சிறைவாசம் அனு பவித்தவர். அரசு போக்குவரத்து கழக நிர்வாத்தால் 120 முறை பணி நீக்கம் செய்யப்பட்டவர்.
ஓய்வு பெற்றோருக்கான பல் வேறு போராட்டங்களை தலை மையேற்று நடத்தியுள்ளார். 1984 ஆம் ஆண்டு அரசுப் போக்குவரத்து கழகத்தில் பணி யில் சேர்ந்து தன்னை தொழிற்சங் கத்துடன் இணைந்து கொண்டு இயக்கப்பணியாற்றிவர் தோழர் கே.வி.குருசாமி. அன்னாரது மறைவுச்செய்தி யறிந்து மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் இரா. விஜ யராஜன், சிஐடியு மாவட்டச் செய லாளர் இரா. தெய்வராஜ், சங் கத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ஆர். தேவராஜ் நிர் வாகிகள் கே.சுப்பிரமணியன், எஸ்.ஆறுமுகம், ஏ.முருகேசன், செல்வராஜ், பி. சபரிதாஸ், சிஐ டியு துணைத் தலைவர் இரா. லெனின், அரசுப் போக்குவரத்து தொழிலாளர் சங்கத் தலைவர் பி.எம்.அழகர்சாமி, பொதுச் செய லாளர் ஏ.கனகசுந்தர், சம்மேளன துணைத் தலைவர்கள் வீ. பிச்சை, ஜி.ராஜேந்திரன், ஆர். வாசுதேவன் உள்ளிட்ட பலர் அவரது உடலுக்கு மாலை அணி வித்து அஞ்சலி செலுத்தினர்.
இறுதி நிகழ்ச்சி திங்களன்று நடைபெற்றது. மறைந்த கே.வி. குருசாமிக்கு சுப்புலெட்சுமி என்ற மனைவியும், உமாதேவி என்ற மக ளும் உள்ளனர்.