சேலம், டிச.23- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் கே.ஆர்.கண்ணன் தனது 100 ஆவது பிறந்தநாளை குடும்பத்தி னர் மற்றும் கட்சி தலைவர்களுடன் கொண்டாடினார். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தோழர் கே.ஆர்.கண்ணன். 1957 முதல் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியிலும், அதன்பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் இணைந்து 79 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் தோழர் கே.ஆர். கண்ணன் டிசம்பர் 23 வெள்ளியன்று தனது 100 ஆவது வயதில் அடியெடுத்து வைத்தார். 100 ஆவது பிறந்த நாளை தனது இல்லத்தில் குடும்பத்தினர் மற்றும் கட்சி தலைவர்களுடன் இணைந்து எளிமையாகக் கொண்டாடினர்.
சிபிஎம் ஓமலூர் இடைக்கமிட்டி செய லாளர் என்.ஈஸ்வரன் தலைமையில் நடை பெற்ற நிகழ்ச்சியில், தோழர் கண்ணன் மற்றும் மனைவி லட்சுமி பாய் ஆகி யோருக்கு மலர், சந்தன மாலைகள், பொன்னாடைகள், புத்தகங்கள் வழங்கி கட்சித் தலைவர்கள் வாழ்த்துதெரிவித்தனர். கட்சியின் மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கடபதி, பி.ராமமூர்த்தி, எம்.குணசேகரன், மேற்கு மாநகர செயலாளர் கனகராஜ், தாலுகா செயலாளர் கே.எஸ்.பழனிசாமி, சிஐடியு மாவட்ட செயலாளர் ஏ.கோவிந்தன், சாலை போக்குவரத்து சங்க மாநில துணைத்தலை வர் எஸ்.கே.தியாகராஜன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.எம்.தேவி, மாவட்ட தலைவர் ஆர்.வைரமணி, போக்குவரத்து சங்க மண்டல பொதுச்செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, தலைவர் செம்பான், சேலம் உருக்காலை சங்க பொதுச்செயலாளர் சுரேஷ் குமார், சாலையோர வியாபாரிகள் சங்க செயலாளர் தனசேகர், மாணவர் சங்க மாவட்ட தலைவர் அருண்குமார், செயலா ளர் பவித்ரன், வங்கி ஊழியர் சங்க மாவட்டத் செயலாளர் தீனதயாளன், பாலம் புத்தக நிலைய உரிமையாளர் சகஸ்ரநாமம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திமுக எம்எல்ஏ வாழ்த்து
இதைத்தொடர்ந்து நூற்றாண்டு காணும் தோழர் கே.ஆர்.கண்ணனை, அவரது இல்லத்தில் திமுக சேலம் மத்திய மாவட்ட செயலாளரும், வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான இரா.ராஜேந்திரன் நேரில் சென்று பொன்னாடை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். மேலும், திமுக நிர்வாகிகள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.