tamilnadu

img

நேரடி நெல் கொள்முதல் புகார்களை வாட்ஸ் அப்பில் தெரிவிக்கலாம்

நெல் விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங் கள் குறித்த புகார்களை  தமிழ்நாடு நுகர்பொருள்  வாணிபக் கழக மேலாண்மை இயக்குந ரின் அலைபேசி எண் ணிற்கு வாட்ஸ் அப்பில் செய்தியாக  தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், முதல்வரின் ஆணைப்படியும், உணவு மற்றும் உணவுப்  பொருள் வழங்கல் துறை அமைச்சரின் அறிவுரையின் படியும் மாநிலம் முழுவதும் நெல் பயிரிடும் விவசாயிகளின் நலன் கருதி 2600-க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள் முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

 60 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்முதல்

 இந்த நெல் கொள்முதல் நிலையங்களில் நாளொன்றிற்கு  சுமார் 12,800 எண்ணிக்கையிலான விவசாயிகளிடமிருந்து சுமார் 60 ஆயிரம் மெ.டன் வரையிலான நெல் கொள்முதல்  செய்யப்பட்டு, கொள்முதல் செய்யப்பட்ட நெல்லிற்கு உண்டான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் நேரடியாக வரவு வைக்கப் பட்டு, நெல் நகர்வு செய்யப்பட்டு வருகிறது. சில நெல் கொள்முதல் மையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்  மூட்டைகளுக்கு கையூட்டு வாங்குவதாக புகார்கள் வருகின்ற  காரணத்தினால் நுகர்பொருள் வாணிபக் கழகம் பல்வேறு நட வடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இலவச தொலைபேசி

 அதன்படி, சென்னை தலைமை அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்படக் கூடிய 18005993540 என்ற எண்ணு டன் இயங்கி வரும் உழவர் உதவி மையம் இலவச தொலைபேசியில் புகார்களைத் தெரிவிக்க விரும்பும் விவசா யிகள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் குறித்த புகார்களை தெரிவிக்கலாம். மேலும், அனைத்து நேரடி நெல்  கொள்முதல் நிலையங்களிலும் மண்டல மேலாளர் / முது நிலை மண்டல மேலாளர் உள்ளிட்ட அலைபேசி எண்களும் விவசாயிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. அந்த  அலைபேசி எண்களையும் தொடர்பு கொண்டு விவசாயி கள் புகார்களை தெரிவிக்கலாம்.

குழுக்கள்  

இத்தகைய புகார்களை தடுத்திடும் விதமாக, தமிழ்நாடு  நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கூடுதல் பதிவாளர் நிலை யில் பிரத்யேக கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் 8 குழுக்கள் அமைக்கப் பட்டு மாநிலம் முழுவதும் இயங்கி வருகின்றன.  மேலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநரின் அலைபேசி எண்ணான 9445257000-க்கு வாட்ஸ் அப் செய்தியாக மட்டும் புகார்களை  அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.