tamilnadu

அறநிலையத்துறை கல்லூரிகளில் சேர்வதற்கு கடும் போட்டி

அறநிலையத்துறை கல்லூரிகளில்  சேர்வதற்கு கடும் போட்டி

சென்னை, மே 10 - தமிழகத்தில் அறநிலையத் துறை சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் சேர்க்கை பெற மாணவர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாக துறை யின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரி வித்தார். சென்னை கொளத்தூர் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025-2026- ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை மாணவர்களுக்கு அறநிலையத் துறை  அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கி, தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர், “கொளத்தூர் கபாலீசுவரர்  கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்று வளாக நேர்காணல் மூலம் டிசிஎஸ் உள்ளிட்ட 9 தனியார் நிறுவனங் களில் 347 மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இந்தக்  கல்லூரியில் பயில 972 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் 240 பேருக்கு மட்டுமே இடம் அளிக்க முடிந் தது”என்றார். அறநிலையத்துறை சார்பில் நடத்தப் படும் 25 பள்ளிகளில் 10,670 மாணவர் களும், 9 கலைக் கல்லூரிகள் மற்றும் ஒரு பாலிடெக்னிக் கல்லூரி உட்பட 10  கல்லூரிகளில் 12,137 பேரும் கல்வி பயின்று வருகின்றனர். ஒவ்வொரு கல்லூரியிலும் பயில்வதற்கு ஆண்டுதோ றும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப் பங்கள் வரப் பெறுகின்றன என்றும் அமைச்சர் தெரிவித்தார். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்  சார்பில் கீழ்ப்பாக்கத்திலும், சமயபுரம் மாரியம்மன் கோயில் சார்பில் 2 செவி லியர் கல்லூரிகளும், மருதமலை சுப்பிர மணிய கோயில் சார்பில் ஒரு பாலி டெக்னிக் கல்லூரியும், ஸ்ரீரங்கம் அரங்க நாத சுவாமி கோயில் சார்பில் கோயில்  கட்டடக்கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரியும் இந்த ஆண்டுக்குள் தொடங் கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப் படும் என்றும் அமைச்சர் கூறினார்.