மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 23ஆவது அகில இந்திய மாநாட்டுக்கு, வியட்நாம் கம்யூ னிஸ்ட்டுகள் சார்பாகவும், வியட்நாம் மக்கள் சார்பாகவும் எங்கள் இதமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கடந்த காலங்களில் எவ்வளவு சிரமங் கள் வந்தபோதிலும் மார்க்சிச-லெனி னிசக் கொள்கையை உயர்த்திப்பிடிப் பதில் எப்போதும் உறுதியுடன் இருந்து வந்திருக்கிறது. இந்தியத் தொழிலாளர் வர்க்கம், விவசாயிகள், உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கான போ ராட்டத்தில் முன்னணியில் இருந்து வந்திருக்கிறது, இடது ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகளுடன் ஒருமைப்பாடு தெரிவிப்பதில் வீர முதல்வனாக இருந்து வந்திருக்கிறது.
குறிப்பாக, சென்ற ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலை மையில் கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி மகத்தான வெற்றி பெற்றி ருப்பதற்கு எங்கள் இதயப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் கட்சி மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டி ருப்பது, வாக்காளர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முற்போக்கு மற்றும் மக்கள்ஆதரவு வளர்ச்சித் திட்டங்களை உறுதியுடன் ஆதரிக்கி றார்கள் என்பதையே பிரதிபலிக்கிறது. இந்தியாவில் கேரளம் மனிதவள வளர்ச்சி மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் மிகவும் உயர்ந்த நிலையில் இருந்துவருகிறது. உங்கள் கட்சி மேலும் பல சாத னைகளை வெற்றிகரமாக சாதித்தி டும் என நாங்கள் உறுதியாக நம்புகி றோம். இந்தியாவின் அரசியல் அரங் கில் உங்கள் கட்சியின் செல்வாக்கு மேலும் உறுதியுடன் உயர்ந்தோங்கும். நம் இரு கட்சிகளுக்கும் இடையே யான ஒருமைப்பாடு, நட்பு மற்றும் ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப் படும், மேலும் தீவிரமானமுறையில் வளர்த்தெடுக்கப்படும். 23ஆவது அகில இந்திய மாநாடு மாபெரும் வெற்றி பெற வாழ்த்து கிறோம்.