tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

நீதியரசர் தலைமையில் குழு

சென்னை: உச்ச நீதிமன்றத்தின் அண்மையத் தீர்ப்பி னால் அரசுப் பணியாளர் பதவி உயர்வு முறையில் சமூக நீதிக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய வும், அதற்கான சட்ட ரீதியான தீர்வுகள் அளிப்பதற்கும் ஓய்வுபெற்ற நீதிபதி ஜி.எம். அக்பர் தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு திங்களன்று அரசாணை வெளி யிட்டுள்ளது.

நெல்லை சு.முத்து மறைவு:  முதலமைச்சர் இரங்கல்

சென்னை: இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மற்றும்  எழுத்தாளர் நெல்லை சு.முத்து மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து  அவர் வெளியிட்டிருக்கும் செய்தியில், ஸ்ரீஹரிகோட்டா வில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் பணி யாற்றியவர் சு.முத்து. அறிவியல், விண்வெளி ஆராய்ச்சி  குறித்து ஏராளமான நூல்களை எளிய தமிழில் எழுதி யுள்ளதோடு மொழி பெயர்ப்பாளராகவும் அறிவியல் தமி ழுக்குப் பங்காற்றியுள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர்  அப்துல் கலாமுடன் பணியாற்றிய முத்து, அப்துல் கலாம் குறித்தும் பல நூல்களை எழுதியுள்ளார். இந்தியாவுக்குப் பெருமை சேர்த்து, தமிழ்மொழிக்கு வளம் சேர்த்து வாழ்ந்து  மறைந்துள்ள நெல்லை சு.முத்துவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக” தெரிவித்துள்ளார்.

ஜாக்டோ - ஜியோ மறுப்பு

சென்னை: நடிகரும், அரசியல் கட்சித் தலைவரு மான விஜய்யை ஜூன் 13 அன்று ஜாக்டோ - ஜியோ சங்கத்  தலைவர் சந்தித்து பேசியதாக வெளியான ஊடகச் செய் திக்கு அவ்வமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். ஜாக்டோ - ஜியோ பேரமைப்பு பல்வேறு சங்கங்கள் கொண்ட கூட்டமைப்பு. ஒவ்வொரு சங்கமும் தனித்துவமாக செயல்படுவது அந்தந்த சங்கங்களின் தனிப்பட்ட முடிவு. அதற்கும் ஜாக்டோ - ஜியோ விற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. எனவே, பத்திரி கைகள் அந்தச் செய்தியை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

ஜூன் 25-இல் தீர்ப்பு

திண்டிவனம்: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், கடந்த 2010 ஆம் ஆண்டு திண்டிவனத்தில் உள்ள தனது வீட்டில் கட்சியினருடன் பேசிக் கொண்டி ருந்தார். அப்போது, ஆயுதங்களுடன் வந்த கும்பல் அவரை தாக்கி கொல்ல முயற்சி செய்தது. காருக்கு அடியில் புகுந்து அவர் உயிர் தப்பினார். ஆனால் அவரது உற வினரும், அதிமுக தொண்டருமான முருகானந்தம் கொல்லப்பட்டார். இக்கொலை மற்றும் கொலை முயற்சி  வழக்கு தொடர்பாக பாமகவைச் சேர்ந்த 20 பேர் மீது ரோஷணை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.  இந்த வழக்கின் தீர்ப்பை ஜூன் 25 ஆம் தேதிக்கு திண்டி வனம் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

பழனிசாமிக்கு அமைச்சர் பதிலடி

சென்னை: அதிமுக ஆட்சியில் துப்பாக்கி மலிவு விலைக்கு விற்கப்பட்டு, கொலை சம்பவங்கள் அதிகம் நடந்ததை மக்கள் மறக்க மாட்டார்கள் என்றும், அதிமுக  ஆட்சியில் துப்பாக்கி கலாச்சாரம் பற்றி உயர் நீதிமன்றம் கண்டித்தது நினைவில்லையா? என்றும் அறிக்கை வெளி யிட்டிருக்கும் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பாமக நிர்வாகியைக் கொலை செய்தவர் பாஜக நிர்வாகியின் மகன் என எடப்பாடி பழனிசாமிக்கு ஏன் சொல்லவில்லை என்றும் பதிலடி கொடுத்துள்ளார்.

நீர்வரத்து அதிகரிப்பு

தருமபுரி: தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து, தருமபுரி மாவட்டம் ஒகே னக்கல்லுக்கு அவ்வப் போது நீர்வரத்து அதிக ரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. திங்க ளன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 7500 கன அடி யாக அதிகரித்து வந்தது

நான் தவறு செய்யவில்லை’

சென்னை: “அவர்கள்  யார்? என்பது விரைவில்  தெரியவரும். அமைதி யாக இருப்பது எனது பலம், கட்சியை அடுத்த  கட்டத்திற்கு கொண்டு செல்லும் துணிச்சலும் திட்டமும் என்னிடம் உள்ளது. மக்களுக்கும் கட்சிக்கும் என்றும் துரோ கம் செய்ய மாட்டேன். அப்படி நான் துரோகம் செய்தால் அதுவே என் கடைசிநாள். பாமகவில் சில சூழ்ச்சிக்காரர்கள் இருக் கிறார்கள்.  நான் எந்த தவறும் செய்யவில்லை. இருப்பினும் என் அப்பா விடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.

‘மார்க்கெட்டிங்’ இல்லையாம்!’

விழுப்புரம்: மதுரை முருக பக்தர்கள் மாநாடு ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், “மதுரை முருக பக்தர்கள் மாநாட் டில் ஒலிக்கும் முருகா, வீர வேல் என்ற முழக்கம் செயின்ட் ஜார்ஜ் கோட்டை யில் எதிரொலிக்க வேண் டும். மார்க்கெட்டிங்-க்காக  முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தவில்லை. முதல மைச்சர் உட்பட அனை வரும் கலந்து கொள்ள லாம். மாநாட்டுக்கு அனு மதி வழங்க மறுக்கிறார்கள். மாநாட்டுக்கான அழைப்பி தழ் கொடுக்க முதல மைச்சர் நேரம் ஒதுக்க மறுக்கிறார்” என்றார்.