tamilnadu

img

பொறையார் த.பே.மா.லு கல்லூரியில் வணிகவியல் துறை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

பொறையார் த.பே.மா.லு கல்லூரியில் வணிகவியல் துறை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

மயிலாடுதுறை, ஜுன் 1-  மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் த.பே.மா.லு கல்லூரியில் வணிகவியல் துறையில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரியின் வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.  வணிகவியல் துறையின் தலைவர் சேவியர் செல்வக்குமார் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் 2024 வரை பயின்ற 200-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள், நிகழ்ச்சியில் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்றவர்களை முன்னாள் மாணவர் சிராஜுதீன் வரவேற்று பேசினார். தாங்கள் கல்வி பயின்ற காலங்களில் நடந்த சுவையான சம்பவங்களையும், மறக்க முடியாத நிகழ்வுகளையும் பகிர்ந்து கொண்டனர் முன்னாள் மாணவர்கள். கல்லூரியின் முதல்வர் ஜான்சன் ஜெயக்குமார் விழா குழுவை பாராட்டி சிறப்புரையாற்றினார். முன்னாள் பேராசிரியர்கள் மரியலாசர், நடராஜன், நெடுஞ்செழியன், ரவிச்சந்திரன், ராஜா சாலமோன், தெய்வசிகாமணி, சம்பத், நவீன்குமார் ஆகியோர் நினைவுகளை பகிர்ந்து உரையாற்றினர். முன்னாள் மாணவர்கள் அனைவரும் குழு புகைப்படம் எடுத்து கொண்டு  நினைவு பரிசினை பெற்றுக் கொண்டனர். முன்னாள் மாணவரும், வழக்கறிஞருமான சுதா நன்றி கூறினார்.