tamilnadu

img

தோழர் ஜி.மணி 2ஆம் ஆண்டு நினைவேந்தல்

திருவள்ளூர், ஜூன் 5- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர், கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர்,  பூ விவசாயிகள் சங்க செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து மறைந்த தோழர் ஜி.மணி பன்முகத் தன்மையோடு திறம்பட பணியாற்றியவர். சிறந்த தலைவர்களை உருவாக்கிய மக்கள் ஊழியர். அவரது இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் ஜூன் 5 அன்று பொன்னேரியில் நடைபெற்றது. விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய துணைச் செயலாளர் வி.சிவதாசன் (கேரளா), அகில இந்திய துணைத் தலைவர் ஏ.லாசர், மாநிலத் தலைவர் எம்.சின்னதுரை எம்எல்ஏ, மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், மாநில பொருளாளர் ஏ.பழனிசாமி, மாநிலச் செயலாளர் வி.மாரியப்பன், மத்தியக் குழு உறுப்பினர் அ.து.கோதண்டன், மாவட்டத் தலைவர் இ.தவமணி, பொருளாளர் என்.கங்காதரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், கே.விஜயன், ஏ.ஜி.கண்ணன், ஜி.மணியின் துணைவியார் கீதா, மகள் சித்ரா, மகன் தினேஷ், மருமகள் பிரதிபா உள்ளிட்ட உறவினர்கள், சங்கத்தின் முன்னணி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பொன்னேரி அம்பேத்கர் சிலை அருகிலிருந்து தலைவர்கள் ஊர்வலமாக சென்று தோழர் ஜி. மணி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.