தோழர்கள் பி.சுந்தரய்யா, இ.கே.நாயனார் நினைவு தினம் கடைப்பிடிப்பு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர்கள் பி.சுந்தரய்யா, இ.கே.நாயனார் ஆகியோரின் நினைவு நாள், கட்சியின் ஈரோடு மாவட்டக் குழு அலுவலகத்தில் திங்களன்று கடைப்பிடிக்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மாநிலக் குழு உறுப்பினர் வீ.அமிர்தலிங்கம், மாவட்ட செயற்குழு மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.