சென்னை,பிப்.19- ஈரோடு மாவட்டம், சத்திய மங்கலத்தில் பிறந்தவர் மயில்சாமி. 57 வயதாகும் அவர் பன்முக திறமைக் கொண்டவர். பலக்குரல் திறமையால் சினிமாவிற்குள் நுழைந்தார். பல முன்னணி நடிகர்களை போல் பேசக் கூடியவர். 1984 ஆம் ஆண்டு சினிமாவில் அடியெடித்து வைத்த அவர், சிறிய கதா பாத்திரங்களில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து வந்தார். பிறகு கமலின் அபூர்வ சகோத ரர்கள், ரஜினியின் பணக்காரன் உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் நடி த்துள்ளார். விஜய், விக்ரம் உள்ளிட்ட நடிகர்களின் படங்களின் நடித்துள் ளார். குறிப்பாக சுந்தர் சியின் ‘தலை நகரம்’ படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடித்த நகைச்சுவை இன்றைக்கும் ரசிகர்களால் கொண் டாடப்பட்டு வருகிறது. அதேபோன்று ‘தூள்’ படத்தில் விவேக்குடன் இணைந்து ‘லட்டு’ காமெடி காட்சி யில் நடித்தார். 2000 ஆம் ஆண்டுக்கு பிறகு பலரும் அறியப்படும் நடிக ராக பல படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்தார். நடிகர் விவேக்வுடன் இணைந்து நடித்த பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தன. தனியார் தொலைக் காட்சியில் ‘காமெடி டைம்’ என்ற நிகழ்ச்சியை மயில்சாமி தொகுத்து வழங்கினார். அப்போது தமிழ் ரசி கர்கள் மத்தியில் பெரும் பிரபல மடைந்தார்.
சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த மயில்சாமிக்கு ஞாயி றன்று(பிப்.19) காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதை யடுத்து குடும்பத்தினர் சென்னை போரூரிலுள்ள தனியார் மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் முன்பே அவர் இறந்துவிட்டார். மயில்சாமியின் திடீர் மறைவு அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் மயில் சாமியின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி விட்டு அவருடனான நினைவுகளை உருக்க மாக பகிர்ந்து வருகின்றனர்.
முதல்வர் இரங்கல்
மயில்சாமியின் மறைவு குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், “பிரபல நகைச்சுவை நடிகர் மயில் சாமி மறைந்தார் என்ற செய்தி யறிந்து வருந்தினேன். பல்வேறு குரல்களில் நகைச்சுவையாக பேசும் ஆற்றல் படைத்த அவர், தன்னு டைய ஒலி நாடாக்கள் வழியாக தமிழ்நாடு முழுவதும் அறிமுக மானவர். தமிழ் நாட்டு மக்களின் இல்லங்களில் ஒருவராக பார்க்கப் படுகிற அளவுக்கு அன்பை பெற்ற வர். தொலைக்காட்சி விவாதங்களில் தன்னுடைய கருத்துகளை ஆழமாக பதிவு செய்தவர். திரையுலகில் தனக்கென முத்திரையை பதிவு செய்த அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும் திரையுலகக் கலைஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கி றேன்” என்று தெரிவித்துள்ளார். மயில்சாமியின் உடலுக்கு இளை ஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டா லின்,முன்னாள் அமைச்சர் டி.ஜெயக் குமார் ஆகியோர் மாலை அணி வித்து அஞ்சலி செலுத்தினார். உணவு அமைச்சர் சக்கரபாணி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்திருக் கிறார்கள்.