tamilnadu

img

கோவை, மதுரை மெட்ரோ ரயில் சேவை ரூ.17,500 கோடி ஒதுக்கீடு

புதுதில்லி, மார்ச் 20- கோவை, மதுரை மாநகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும்  விதமாக முறையே ரூ.9,000 கோடி மற்றும்  ரூ.8,500 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அர சின் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டி ருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.நட ராஜன் மற்றும் சு.வெங்கடேசன் ஆகியோர் வரவேற்று நன்றி தெரிவித்துள்ளனர்.

பி.ஆர்.நடராஜன் வரவேற்பு

மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்ப தாவது,  தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் பல்வேறு வரவேற்கத்தக்க அம்சங்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக, குடும்பத் தலை விகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை யை பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் இருந்து துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளபடியே இது யாருடைய கையையும் எதிர்பார்க்காமல் இருப்பதற்கு பெரும் உதவி புரியும். இது பெண்களுக்கான உரிமைத் தொகையாகவே இருக்கும். கோவை மாநகரம் என்றாலே போக்கு வரத்து நெரிசல் மிக்க நகரம் என்றாகிப் போனது.

இதனை கருத்தில் கொண்டு 2009ல்  நான் கோவை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட காலத்தில் இருந்து மெட்ரோ ரயில் சேவையின் அவசியம் குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். இதன்தொடர்ச்சியாக 2013 ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் நிபுணர் ஸ்ரீதரனை கோவை  மாவட்டத்திற்கு வரவழைத்து மெட்ரோ ரயில்  சாத்தியங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வைத்தோம். கோவையில் மெட்ரோ ரயில்  சேவை தொடங்குவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக அன்றே உறுதிப்படுத்தினோம்.  ஆனால், 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த  கடந்த அதிமுக அரசு இதனை கிடப்பில் போட்டது. தற்போது தமிழக அரசு நிதிநிலை  அறிக்கையில், கோவையில் 9 ஆயிரம்  கோடி யில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப் படும். அவிநாசி சாலை - சத்தியமங்கலம் சாலையை உள்ளடக்கிய பகுதிகளில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படும் என  அறிவித்திருப்பது பெரும் மகிழ்ச்சியை  அளிக்கிறது. கோவை மாநகர மக்களின் சார்பில் தமிழக முதலமைச்சருக்கு நெஞ்  சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கி றேன்.

இதேபோன்று, மகளிர் சுய உதவி குழு வுக்கு 30,000 கோடி கடன் வழங்க இலக்கு, மதுரை, கோவை, திருச்சி, நீலகிரியில் ஆதி  திராவிட மாணவர்களுக்காக 100 கோடியில்  விடுதிகள், கோவையில் 172 கோடி ரூபாய்  மதிப்பீட்டில் செம்மொழி பூங்கா, கோவை யில்  புதிய சிப்காட் பூங்காக்கள், கோவை  மாநகராட்சியில் முக்கிய பொது இடங்களில் இலவச வைஃபை சேவை உள்ளிட்ட அறி விப்புகள் என அறிவித்திருப்பது பெரும் மகிழ்வைத் தருகிறது. 

கோவை மாவட்டம் திமுக கூட்டணிக்கு ஒரு சட்டப்பேரவை உறுப்பினரைக்கூட தர வில்லை; ஆகவே கோவை புறக்கணிக்கப் படும் என எதிர்க்கட்சிகள் கூறியபோது, என்னு டைய ஆட்சி “வாக்களித்த மக்களுக்கும், வாக்களிக்காத மக்கள் ஏன் வாக்களிக்க வில்லை என்கிற ஏக்கத்தை ஏற்படுத்தும்  ஆட்சியாக இருக்கும்” என்று சொன்னதை தமிழக முதல்வர் நிரூபித்துள்ளதாகவே கருதுகிறேன். தமிழகம் பயன்பெறும் அறி விப்புகளும், கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கு கோவை மாவட்ட மக்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை  தெரிவித்துக்கொள்கிறேன்.  இதேபோன்று, பள்ளிகள், கல்லூரிகள் நிறைந்த கல்வி மாவட்டமாக உள்ள கோவை யை மையப்படுத்தி, அறிவியல் தேவையாக  இருக்கிற கோளரங்கம் அமைக்கப்பட வேண்  டும். இது மாணவர்களுக்கான கல்வி ஆய்வு  கூடமாக அமைய உதவி புரியும். இதனை யும் தமிழக முதல்வர் பரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சு.வெங்கடேசன் எம்.பி. நன்றி

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் விடுத்துள்ள செய்தியில், “மதுரையின் வளர்ச்சிக்கும், போக்குவரத்து நெரிசலுக்கும் தீர்வுகாணப்பட மதுரை மெட்ரோ திட்டம் அறிவிக்கப்பட வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை ஏற்று ரூ. 8,500 கோடி ஒதுக்கீடு செய்துள்ள தமிழ்நாடு முதலமைச்சருக்கு மதுரை மக்களின் சார்பில் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.