சென்னை, டிச.8 வங்கக்கடலில் உருவாகியுள்ள சூறாவளி புயலில் சிக்கிய 3பேரை கடலோர காவல்படையினர் பத்திர மாக மீட்டனர். கடலூர் அருகே கடலில் ஹைட்ரோ கார்பன் உற்பத்தி தளம் உள்ளது. மாண்டஸ் சூறாவளி காரணமாக அந்த மிதக்கும் உற்பத்தி நிலையம் சாய்ந்து வந்ததையடுத்து கடலோர காவல் படையினருக்கு அவசர உதவி அழைப்பு வந்தது. இதையடுத்து அப்படையின் ஹெலிகாப்டர் பிரிவினர் கடும் சவால்களுக்கு இடையே புயலையும் பொருட்படுத்தாமல் விரைந்து சென்று 3 ஊழியர்களையும் பாதுகாப்பாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.