tamilnadu

img

கூட்டுறவு வங்கிகளை மண்டல அளவில் ஒருங்கிணைத்து பலப்படுத்த வேண்டும்

குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.10 ஆயிரம் வழங்கக் கோரி தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்  சம்மேளனம் சார்பில் சனிக்கிழமை (பிப்.8) சென்னை எழும்பூர் ராஜ ரத்தினம் ஸ்டேடியம் அருகில் தர்ணா நடைபெற்றது. உதவி மேலாளர் ஊதியக் கற்றை தவறாக இருப்பதால் 01.01.2022 தேதியில் 15 விழுக்காடு ஊதிய உயர்வு கிடைப்பவருக்கு, 5 ஆண்டுகள் கழித்து 9.75 விழுக் காடாக குறைகிறது. எனவே 01.01.2022 முதல் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். நடைமுறையில் உள்ள உரிமை கள், சலுகைகள் தொடரும் என்ற  வாசகம் ஒப்பந்தத்தில் சேர்க்கப் பட வேண்டும். நட்டமடைந்த வங்கி களுக்கு 10 விழுக்காடு ஊதிய உயர்வுடன் ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும்.

கல்வி நிறுவனங்களில் கல்வி  பயில்வோருக்கு அரசு நிர்ணயித் துள்ள கட்டணம் வழங்க வேண்டும்.  குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.10  ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். மத்திய கூட்டுறவு வங்கி  ஊழியர்களுக்கு உள்ள ஓய்வூதிய திட்டம்போல் நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கும் அமல்படுத்த வேண்டும். அனைத்து வங்கி ஊழியர்களுக்கும் 16 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  பின்னர் தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளன மாநிலத் தலைவர் தி.தமிழரசு செய்தி யாளர்களிடம் பேசுகையில், “கூட்டு றவு வங்கிகளை மன்டல அளவில் ஒருங்கிணைத்து பலப்படுத்த வேண்டும். ரிசர்வ் வங்கி பொதுத் துறை வங்கிகளை தனியாரிடம் கொடுக்க முடிவு எடுத்துள்ளது. கூட்டுறவு வங்கிகளையும் தனி யாரிடம் கொடுக்கிறது. இதை மாநில அரசு தடுத்து நிறுத்த வேண்டும். ரிசர்வ் வங்கி போடுகிற  கட்டுப்பாடுகளை ஏற்காவிட்டால் வங்கி ஒழுங்குமுறை சட்டம்  1949-ன்படி கூட்டுறவு வங்கிகள்  மூடப்படும் என்று அறிவித்துள்ளது

இந்த வங்கிகள் அனைத்தும் சிறிய வங்கிகள், செலவை கட்டுப் படுத்த முடியவில்லை. ஏராளமான  நவீனமயமாக்கல் செய்யப்பட்டு உள்ளது. ரிசர்வ் வங்கி, கூட்டு றவு வங்கிகளை தனியார் மயமாக்கி  சிறு நிதி வழங்கும் வங்கியாக மாற்ற  உத்தரவிட்டுள்ளது. கடந்த ஊதிய உயர்வு ஒப்பந்தம் 31.12.2021 அன்று  முடிவடைந்துள்ளது. 1.01.2022 அன்று புதிய ஊதிய உயர்வு  வழங்க வேண்டும். ஜூலை மாதம் வெளிவந்த அரசாணையை மாநில  கூட்டுறவு பதிவாளர் அமல்படுத்த வில்லை. அதிகாரிகள் சொல்வதை  ஆட்சியாளர்கள் கேட்கிறார்கள். எனவே கோரிக்கைகளை வலி யுறுத்தி அடுத்த கட்டமாக வேலை  நிறுத்தப் போராட்டத்தை நடத்த உள்ளோம்” என்றார். தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளன தலைவர் தி.தமிழரசு தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தை இந்திய வங்கி ஊழியர் சம்மேளன மாநிலத்  தலைவர் சுனில் குமார் துவக்கி வைத்தார். சம்மேளன பொதுச் செயலாளர் இ.சர்வேசன், துணைத்  தலைவர் ராஜகேசி, பொருளாளர் வி.அரிகிருஷ்ணன், பெபி மாநில  உதவித் தலைவர் சி.பி.கிருஷ்ணன், எஸ்.வி.வேணுகோபாலன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.