தொழிலாளர் விரோதச் செயலில் ஈடுபடும் இந்தியா யமஹா நிறுவனம்
சென்னை,அக்.11- போட்டிச் சங்கத்தை தோற்று வித்து, சங்க மோதலை உருவாக்கி தொழிலமைதிக்கு ஊறு விளை விக்கும் அபாயத்தில் ,தொழிலாளர் விரோதச் செயலில் இந்தியா யமஹா நிறுவனம் ஈடுபட்டுள்ளது.இப்பிரச்ச னையில் தமிழக அரசு தலை யிட்டு தீர்வுகாண வேண்டும் என்று வலியுறுத்தி சிஐடியு வேலை நிறுத்தத்தைத் துவக்கியுள்ளது. முன்னதாக இப்பிரச்சனை குறித்து இந்தியா யமஹா மோட்டார் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) தலை வர் அ.சவுந்தரராசன், முதல்வர், ஊரக தொழில் வளர்ச்சித்துறை அமைச்சர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர், காஞ்சி புரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு மனு அனுப்பியிருந்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: இந்தியா யமஹா நிறுவனம் வல்லம் வடகால் சிப்காட்டில் இயங்கி வருகிறது.இந்த நிறுவனத்தில் இந்தியா யமஹா மோட்டார் தொழி லாளர் சங்கம் (538 KPM) 2018 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. சங்கம் அமைக்கும் உரிமைக்கு எதிரான நிர்வாகத்தின் பழிவாங்கும் நட வடிக்கையை கைவிடக் கோரி வேலை நிறுத்தம் 55 நாட்கள் நடந்தது. இந்த வேலை நிறுத்தம் அரசின் தலை யீட்டின் பேரில் இறுதியில் மாவட்ட ஆட்சியர் முன்பு ஏற்பட்ட இருதரப்பும் ஏற்றுக்கொண்ட அறிவுரையின்படி விலக்கிக் கொள்ளப்பட்டது. வேலை நீக்கம் செய்யப்பட்ட இரண்டு தொழி லாளர்களும் வேலையில் சேர்க்கப் பட்டனர். சங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்தியா யமஹா சங்கத்தின் பேரவைக்கூட்டம் 5.09.2021 அன்று நடத்தப்பட்டு, பேரவையின் முடி வின்படி சங்க நிர்வாகிகளுக்கான தேர் தல் 19.09.2021 அன்று நடைபெற்றது. புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். புதிய நிர்வாகிகளுடன் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை நிர்வா கம் நடத்த வேண்டிய நிலையில் நிர்வா கம் தனக்கு ஒத்துழைத்துப் போகிற பழைய நிர்வாகிகளைக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியது. இது மோசமான தொழிலாளர் விரோத நட வடிக்கையாகும் (unfair Labour practices)
பழைய நிர்வாகிகள் தாங்கள்தான் சங்க பிரதிநிதிகள் என்று அறிவிக்கக் கோரி தொழிற்சங்க பதிவாளர் ICL-II முன்னிலையில் தொடுத்த வழக்கில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகி கள்தான் சங்கத்தின் பிரதிநிதிகள் என்பதை நிரூபிப்பதற்கு தேவையான அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளார்கள். ஆனால் பழைய நிர்வாகிகள் அவர்களின் பெரும் பான்மையை நிரூபிக்க முடிய வில்லை. இந்நிலையில் முடிவு அறிவிக்கப்படாமல் உள்ளது. இதற்கிடையில் மாவட்ட உரிமை யியல் நீதி மன்றத்தில் இந்தியா யமஹா மோட்டார் தொழிலாளர் சங்கமும் அதன் புதிதாக தேர்ந்தெடுக் கப்பட்ட நிர்வாகிகளுந்தான் தொழி லாளர்களின் பிரதிநிதிகள் என்று வழக்கு தொடுத்தோம். (வழக்கு எண் ஐ.ஏ.3/2022 Inos 176 /2022) இந்த வழக்கில் நீதிமன்றம் இந்த சங்கத்தின் பழைய நிர்வாகிகளோடு பேசக் கூடாது என்று தடைவிதித்து உத்தர விட்டுள்ளது.
மூன்றே நாட்களில் போட்டி சங்கத்தை பதிவுசெய்த தொழிலாளர் துறை
நீதிமன்றம், பழைய நிர்வாகிகள் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அதிகாரமற்றவர்கள் என்று சொல்லிவிட்ட நிலையில் துரோக ஒப்பந்தம் போட முடியாமல் நிர்வாகம் ஏமாந்து போனது, நிர்வாகம் அவர் களுக்கு வேண்டியவர்களை கொண்டு போட்டிசங்கம் உருவாக்கி யுள்ளது. சுதந்திர இந்தியா யமஹா மோட்டார் தொழிலாளர் சங்கம் என்ற பெயரில் மூன்றே நாட்களில் தொழி லாளர் துறை பதிவு செய்து கொடுத்துள் ளது. தொழிலாளர் துறை வரலாற்றில் இவ்வளவு வேகமாக தொழிற்சங்க பதிவு நடந்ததேயில்லை. நாங்கள் பதி விற்காக விண்ணப்பித்த மனுக்கள் பல மாதங்களாக நிலுவையில் இருக் கின்றன. இந்த போட்டி சங்கத்திற்கு தொழி லாளர் ஆதரவை கோரும் கையெழுத்து இயக்கத்தை அதிகாரிகளே முன்னின்று ஆலைக்குள் நடத்துகின்றனர். இதுவும் மோச மான தொழிற்சங்க விரோத, தொழிலாளர் விரோத செயலாகும். தொழிற்சங்க பதிவாளர் முன்பு தாங்கள் தான் இந்தியா யமஹா மோட்டார் சங்கத்தின் உண்மையான பிரதிநிதிகள் என்று அறிவிக்கு மாறு பழைய நிர்வாகிகள் தொடுத்த வழக்கில் அவர்கள் குறிப்பிட்ட நிரந்தர தொழிலாளர் எண்ணிக்கை 856 என கூறியுள்ளனர். ஆனால் சில மாதங்களில் தகுதிகாண் பயிற்சியில் (புரபேஷனரி) இருப்பவர்களை யும் சேர்த்து நிறுவனம் நிரந்தர தொழி லாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேல் என்று கூறுகிறது. இவை எல்லாமே தொழிலாளர்களின் தொழிற்சங்க ஜனநாயக உரிமையை மறுக்கவும், நிறுவனத்திற்கு ஆதரவான சிலரை வைத்துக்கொண்டு பேர வையோ, தொழிலாளர் ஒப்புதலோ இல்லா மல், போலிமினிட்ஸ் தயாரித்து துரோக ஒப் பந்தம் போடுவதற்கான ஏற்பாடுகள் தான்
இதுபோன்ற ஒன்று நிகழுமானால் அதை தடுப்பதற்கு வேலைநிறுத்தம் செய்வது தொழிலாளர்களுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும். வேலை நிறுத்தமோ உற்பத்தி பாதிப்போ ஏற்படக்கூடாது என்று பலமாதங்களாக தொழிலாளர் துறையிலும், நீதிமன்றத்திலும் சட்ட நடவடிக்கைகளை மட்டும் இந்தியா யமஹா மோட்டார் தொழி லாளர்சங்கம் எடுத்து வந்தது. ஆனால், நிர்வா கத்தின் நடவடிக்கை தொழிற்சங்க உறுப்பி னர்களை பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாக்கியுள்ளது, எனவே தாங்கள் தலை யிட்டு போட்டி சங்கம் அமைக்கும் கலாச்சா ரத்தை நிறுத்த வேண்டும்.
மறைமுக வாக்கெடுப்பு நடத்துக!
தொழில் அமைதிக்கு ஊறு நேராமலோ, வேலை நிறுத்தமோ நடக்காமல் இருக்க வேண்டுமானால், இந்தியா யமஹா மோட்டார் தொழிலாளர் சங்கத்திற்கு மறைமுக வாக் கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை அறிந்து ஒப்பந்தம் போட ஏற்பாடு செய்ய வேண்டும். ஒரு துரோக ஒப்பந்தம் தொழிலாளர் முது குக்கு பின்னால் செய்யப்படுமானால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டிய வருத்தம் தரு கிற முடிவை நாங்கள் மேற்கொள்ள வேண்டி யிருக்கும். இவ்வாறு அதில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அரசுத் தரப்பில் எந்த நட வடிக்கையும் இல்லாத சூழலில், இந்தியா யமஹா தொழிலாளர்கள், தங்களது கோரிக் கைகளை வலியுறுத்தி, ஆலை வாயிலில் செவ்வாய் மாலை 4 மணி முதல் வேலை நிறுத்தம் துவக்கினர்.