tamilnadu

img

மினி மாரத்தான் போட்டி : அமைச்சர் த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்

நாகர்கோவில், நவ. 2- இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) மாநில மாநாடு நவம்பர் 4,5,6 தேதிகளில் கன்னியா குமரியிலும், அதையொட்டி 6 ஆம் தேதி ஒரு லட்சம் தொழிலாளர்கள் அணிவகுக்கும் செம்படைப்பேரணி நாகர்கோவிலிலும் நடைபெற உள் ளது. தொழிலாளர் மாநாட்டின் ஒரு பகுதியாக இளம் தலைமுறையின ரை ஊக்குவிக்கும் வகையில் மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. புதனன்று காலை 7 மணிக்கு நாகர்கோவில் பார்வதிபுரம் மேம்பா லம் பகுதியில் இருந்து தமிழக தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் செங்கொடி அசைத்து மினி மாரத்தான் ஓட்ட த்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு வரவேற்புக்குழுத் தலைவர் வள்ளி வேலு தலைமை வகித்தார்.

மாநகர  மேயர் ரெ.மகேஷ், சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி, மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.லீமாறோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.வி.பெல்லார்மின், அகமது உசேன், சிஐடியு மாவட்ட தலைவர் சிங்காரன், கே.தங்க மோகன், வரவேற்புக்குழு தலைவர் செலஸ்டின், நிர்வாகிகளான பேராசிரியர்கள் மனோகர ஜஸ்டஸ், நாகராஜன், மரிய ஸ்டீபன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். மினி மாரத்தானில் பங்கேற்ற  மாணவ-மாணவிகள் பால்பண்ணை வெட்டூர்ணிமடம், டபிள்யுசிசி சந்திப்பு, மணிமேடை வழியாக மாவட்ட விளையாட்டுத் திடலை வந்த டைந்தனர். பள்ளி மாணவ- மாணவி கள், கல்லூரி மாணவ- மாணவிகள் என நான்கு பிரிவுகளில் தலா 10 பேர்  என 40 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப் பரிசுகளை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார். பரிசளிப்பு விழாவுக்கு வரவேற்புக்குழு புரவலர் மரியவின்சென்ட் தலைமை வகித்தார். அருள் ஜெரால்டு பிரகாஷ், மோகன் ரெஜீஸ்குமார், டெல்பின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.