சிபிஎம் சிறப்பு பேரவையில் சிஐடியு நிதியளிப்பு
திருவாரூர், மே 3- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு பேரவை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க கட்டடத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. பேரவைக்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி. முருகையன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் சிறப்புரையாற்றினார். நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி. சுந்தரமூர்த்தி, டி. வீரபாண்டியன், கே.பி. ஜோதிபாசு, மாவட்டக்குழு உறுப்பினர். இரா. மாலதி மற்றும் ஆட்டோ தொழிலாளர் சங்கம், அரசு போக்குவரத்து சங்கம் மற்றும் மின் ஊழியர் மத்திய அமைப்பு உள்ளிட்ட சிஐடியு இணைப்பு சங்கத்தின் கட்சி கிளைச் செயலாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பேரவை நிகழ்வில் சிஐடியு மாவட்ட மையத்திலிருந்து கட்சி நிதியாக ரூ.50,000 சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகத்திடம், சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா. மாலதி, தலைவர் எம்.கே.என். அனிபா, கே.கஜேந்திரன் ஆகியோர் வழங்கினர்.