tamilnadu

img

சோழவந்தான் எம்எல்ஏ-வுக்கும் கொரோனா தொற்று... 

மதுரை 
தமிழகத்தில் கொரோனா பரவல் விகிதம் புரியாத நிலைமையில் உள்ளது. தினசரி பாதிப்பு கூடுவதும், குறைவதுமாக உள்ள நிலையில், கொரோனா தடுப்பு பணி மற்றும் நிவாரண உதவிகளை செய்யும் தமிழக மக்கள் பிரநிதிகளையும் கொரோனா மருத்துவமனைக்கு அனுப்பி வருகிறது. 

இதுவரை 27 எம்எல்ஏ-க்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மதுரை மாவட்டத்தின் கிராமப்புற சட்டமன்ற தொகுதியான சோழவந்தான் அதிமுக எம்எல்ஏ மாணிக்கத்திற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனராவால் பாதிக்கப்பட்ட மொத்த எம்எல்ஏ-களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. 

அதுவும் இன்று ஒரே நாளில், ஒரே கட்சியைச் சேர்ந்த 2 எம்எல்ஏ-க்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அக்கட்சி வட்டாரத்தில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  முன்னதாக இன்று (ஞாயிறு) திருச்சி மாவட்டத்தின் முக்கிய நகரான மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக பெண் எம்எல்ஏ பரமேஸ்வரிக்கு கொரோனா பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.