tamilnadu

img

கண்ணகிகோவில் சித்திரை முழுநிலவு விழா பளியன்குடி வனப்பாதை சீரமைப்பு

தேனி, ஏப்.30- சித்திரை முழுநிலவு விழாவுக்கு  தமிழக வனப்  பகுதியான பளியன்குடியிலி ருந்து  கண்ணகிகோவிலுக்கு பக்தர்கள் நடந்துசெல்லும் வனப்பாதையை கூடலூர் வனத்துறையினர் சீர மைக்கும் பணிகளில் ஈடு பட்டு வருகிறார்கள்  கண்ணகி கோவிலில் சித்ராபௌர்ணமி விழா வரும் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. அன்று விழா நடத்துவது மற்றும் பக்தர்களுக்கு செய்யவேண்டிய அடிப்  படை வசதிகள் தொடர்பாக தேனி, இடுக்கி மாவட்ட  ஆட்சியர்கள் தலைமை யில் இரு மாநில அரசு அதி காரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக்கூட்டம் கடந்த 17 ஆம் தேதி தேக்கடி யில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில், தமிழக, கேரள வனப்பகுதி வழியாக நடைபயணமாக கோவிலுக்குச் செல்லும்  பக்  தர்களுக்கு வசதியாக பாதை  சீரமைப்பது, குடிதண்ணீர் வசதி, கழிப்பிட வசதி செய்து தருவது குறித்தும் பேசப் பட்டது.  இந்நிலையில் நேற்று  முன்தினம் முதல் கூடலூர்  ரேஞ்சர் முரளீதரன் தலை மையில் வனப்பணியாளர் கள் பளியன்குடி வழியாக கண்ணகி கோவிலுக்குச் செல்லும் வனப்பாதையை சீரமைத்து வருகின்றனர். பளியன்குடியிலிருந்து அத்தியூத்து வரை நடை பாதையில் உள்ள செடி கொடிகளை வெட்டி அகற்றி, பக்தர்கள் நடந்து செல்வ தற்கு ஏதுவாக பாதையை சரி செய்துள்ளனர்.  இதுகுறித்து வனத்துறை யினர் கூறுகையில், பளி யன்குடியிலிருந்து அத்தி யூத்து வரை மூன்று கிலோ மீட்டர் வனப்பகுதியில் பக் தர்கள் நடந்து செல்ல பாதை  சீரமைக்கப்பட்டது. தற்போது மழை பெய்து வரு வதால் இரண்டு நாட்க ளுக்குப்பின் இப்பாதையில் சுண்ணாம்பு போடப்படும் அதுபோல் கோவில் தோர ணவாயில் பகுதியில் உள்ள சுனை (கிணறு) சுத்தப்படுத் தப்பட்டது என்றார்.