வேலூர் பென்ட்லேண்ட் மருத்துவமனையை விரைவில் முதலமைச்சர் திறந்து வைப்பார்
அமைச்சர் எ.வ. வேலு பேட்டி
வேலூர், ஜூன் 7 - வேலூர் மாவட்டம், வேலூர் பெருமுகையில் 46 கோடி ரூபாய் மதிப்பில் 250 படுக்கை வசதி கொண்ட தங்கும் விடுதி கட்டு மான பணிகள் மற்றும் வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவ மனை வளாகத்தில் ரூ.150 கோடி யில் தரைதளம் மற்றும் 7 தளங்க ளுடன் கூடிய பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டு மான பணிகளை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு வெள்ளியன்று (ஜூன் 6) ஆய்வு செய்தார். அப்போது அவர் தரையில் போடப்பட்டிருந்த டைல்ஸ், ஜன்னல் கம்பிகளின் தரம், ஆக்சிஜன் பைப் லைன் வசதிகள், நோயாளிகளுக்கு படுக்கை வசதிகள் உள்ளிட்டவற்றை பார்வை யிட்டு அதுதொடர்பாக அதிகாரி களிடம் கேட்டறிந்தார். ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறுகையில், வேலூர் மாவட்ட மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பென்ட்லேண்ட் மருத்துவமனையை விரைவில் முதல்வர் திறந்து வைக்க உள்ளார். அடுக்கம்பாறையில் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்கப்பட்ட பின்னர் பென்ட்லேண்ட் மருத்துவ மனையில் எந்த பணிகளும் மேற்கொள்ளப்படாமல் இருந்தது. எம்எல்ஏக்கள் ஏ.பி.நந்த குமார், ப.கார்த்திகேயன் ஆகி யோர் எதிர்க்கட்சியாக இருந்த போதும் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையை சீரமைத்து புதிய மருத்துவமனை கட்ட வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தனர். முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை ரூ.150 கோடியில் பன்னோக்கு சிறப்பு உயர்சிகிச்சை மருத்துவமனையாக கட்டப்படும் என அறிவித்தார். அதைத்தொடர்ந்து நிதி ஒதுக்கப்பட்டு தற்போது அனைத்து பணிகளும் முடிவடை யும் நிலையில் உள்ளது. இந்த மருத்துவமனையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரை வில் திறந்து வைக்க உள்ளார். இந்த மருத்துவமனையில் மொத்தம் 562 படுக்கைகள், 11 அறுவை சிகிச்சை அரங்கங்கள், தீவிர சிகிச்சை பிரிவு, அவசர கால சிகிச்சை பிரிவு, குழந்தைகள் சிகிச்சை பிரிவு, இதய நோய்கள் தொடர்பான பிரிவு, நரம்பியல் பிரிவு என பல்வேறு சிறப்பு மருத்துவ பிரிவுகள் ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும், மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவு, முதலுதவி மையம், சிறப்பு மருத்துவம், பிளாஸ்டிக் சர்ஜரி, ஆய்வகங்கள், நிர்வாக அலுவலகம், நோயாளிகள் பயன்படுத்தக்கூடிய படுக்கைகள், படுக்கை விரிப்புகளை தூய்மை செய்வதற்கான நவீன சலவை மையம் போன்ற பல்வேறு சிறப்பு வசதிகளை கொண்ட மருத்து வமனையாக இது திறக்கப்பட உள்ளது. மேலும் இம்மருத்துவ மனைக்கான சுற்றுச்சூழல் சான்றி தழ், நகரமைப்பு சான்றிதழ் போன்ற அனைத்து சான்றிதழ்களும் பெறப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் மூடப்படு வதற்கான வாய்ப்பு இல்லை. சுங்கச்சாவடிகள் மூலம் வசூ லிக்கப்படும் பணம் சாலைகளை பராமரிப்பதற்கு தேவைப்படும் என்பதால் எந்த ஒரு காலத்திலும் சுங்கச்சாவடிகள் மூடப்படாது என்று ஒன்றிய அரசு நான் எழுதிய கடிதத்துக்கு பதில் கொடுத்துள்ளது. திமுக ஆட்சியில் 35 ரயில்வே மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 32 மேம்பாலங் கள் ஒரு சில மாதங்களில் முடிவடையும் நிலையில் உள்ளன. 10 புதிய பாலங்கள் கட்டுவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு பணிகள் அதற்கான பணிகள் நடந்து வருகிறது. வேலூரில் 13.40 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.300 கோடி திட்ட மதிப்பீட்டில் சுற்றுவட்ட சாலை அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் 3 பாலங்களும் அமைய உள்ளது. காட்பாடி பிரம்மபுரம் முதல் சத்துவாச்சாரி வரையில் ரூ.100 கோடிக்கு பாலாற்றின் குறுக்கே மேம்பால பணிகள் நடந்து வருகிறது என்று கூறினார். இந்த ஆய்வின்போது வேலூர் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்பு லெட்சுமி, எம்எல்ஏக்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், வில்வநாதன், மேயர் சுஜாதா, பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் மணி வண்ணன், தலைமை பொறியாளர் மணிகண்டன் கண்காணிப்பு பொறி யாளர் அருள், செயற்பொறியாளர் சுடலைமுத்து, உதவி செயற் பொறியாளர் படவேட்டான் உடனி ருந்தனர்.