tamilnadu

img

விடுதலைப் போராட்டத்துக்கு துரோகம் செய்ததே ஆர்எஸ்எஸ் மரபு

தலச்சேரி, டிச.27- சுதந்திரப் போராட்டத்துக்கு துரோகம் செய்த வர்களை துணிச்சலான தேசபக்தர்கள் என்றும், விடுதலைப் போராட்ட வீரர்கள் என்றும் இன்றைய இந்திய ஆட்சியாளர்கள் சித்தரித்து வருகின்றனர் என்று சிபிஎம் அரசியல் குழு உறுப்பினரும் கேரள முதல்வருமான பின ராயி விஜயன் சாடினார்.  “ஆர்எஸ்எஸ் - பாஜக பரிவாரங்களால் துணிச்சலான தேசபக்தர் என்று போற்றப்பட்ட சாவர்க்கர், ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிவிட்டு அந்தமான் சிறையில் இருந்து விடுதலை பெற்றார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் எந்தப் பங்கையும் வகிக்கவில்லை. சுதந்திரப் போராட்டத்தை எந்தெந்த வழிகளில் சிதைக்கலாம் என்று சிந்தித்தார்கள். அன்றைய சங் பரிவாரத் தலை வர்கள் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக அறிவிப்பு செய்திருந்தனர். ‘நாங்கள் பிரிட்டிஷ் வைஸ்ராயை எதிர்க்கவில்லை, நீங்கள் இங்கேயே இருங்கள்’ என்று அன்றைய சங்பரி வார் தலைவர்கள் கூறினார்கள்” என்றும் பினராயி விஜயன் விவரித்தார். கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு பினராயி  பாறப்புறத்தில் நடைபெற்றது அந்த மாநாட்டு 83ஆம் ஆண்டு விழா நிறைவுக் கூட்டத்தை துவக்கி வைத்து பினராயி  விஜயன் மேலும் பேசியதாவது:

தேசிய இயக்கத்தில் கம்யூனிஸ்டுகள் முக்கிய பங்கு வகித்தனர். காங்கிரஸ் அமர்வில் முழு விடுதலை என்கிற தீர்மானத்தை முன்வைத்தவர் ஒரு கம்யூனிஸ்ட். முதலில் காங்கிரஸ் அதை ஏற்கவில்லை, ஆனால் பின்னர் அவர்களும் இந்த முழக்கத்தை ஏற்க  வேண்டியதாயிற்று. விடுதலைக்குப் பிறகும் கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான அரசின் தாக்குதல் தொடர்ந்தது. தோழர் ஏ.கே.கோபா லன், சிறையில் இருந்துதான் விடுதலையின் விடியலை தரிசித்தார். இதற்குப் பிறகும் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு எதிராக அன்றைய காங்கிரஸ் அரசு கொடூர வேட்டை நடத்தியது. கட்சியை தடை செய்ததன் மூலம், கட்சி நட வடிக்கையை இல்லாது அழித்தொழிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 1952-இல் தேர்தல் நடந்தபோது கம்யூனிஸ்ட் கட்சி முக்கிய எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.

மோடி அரசு வந்த பிறகு...

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மதச்சார்பற்ற அரசமைப்பைக் கொண்ட நாட்டில் மத அடிப்படையிலான குடியுரிமைச் சட்டத் திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டில் உள்ள ஒரு பிரிவினரி டையே பெரும் கவலையை ஏற்படுத்தியது. குடிமகனாக வாழ முடியுமா என்ற கவலை எழுந்தபோது, கேரளாவில் குடியுரிமை திருத்தச்  சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று முடிவு  செய்யப்பட்டது. அது ஆறுதல் அளிப்பதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த நிலைப்பாட்டை நாடு கவனித்தது. பல மாநிலங்கள் இந்த நிலைப்பாட்டை பின்னர் மேற்கொண்டன. குடியுரிமை திருத்தச் சட்டத்தைப் போலவே இந்தி மொழியும் திணிக்கப்படுகிறது.

மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை எப்படி கைவிடு வது என ஒன்றிய பாஜக அரசு யோசித்து வரு கிறது. சமூக நலப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் சில காணாமல் போய்விட்டன. சில கடுமையாக வெட்டப்பட்டுள்ளன. ஒன்றிய அரசின் நிலைப்பாட்டின் ஒரு பகுதியாக, மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகின்றனர். மக்கள் போராட்டப் பாதைக்கு வருவது அதிகரித்து வருகிறது. இதுபோன்ற விசயங்கள் சிந்திக்கப் படுவதைத் தடுக்க வகுப்புவாத அணிதிரட்டல் தீவிரப்படுத்தப்படுகிறது. ஆர்எஸ்எஸ்-பாஜக பரிவாரம் மக்களை வகுப்புவாத வெறுப்புக்குள் தள்ள முயற்சிக்கிறது; அதற்கு, அனைத்து வகையான ஒத்துழைப்பையும் ஒன்றிய அரசு செய்கிறது.

‘அய்யோ பாவம், அந்த ஏழைகள்’ 

சாதாரண விவசாயிகள் கடன் வாங்கினால் ஜப்தி செய்யும் நாட்டில் 11 லட்சம் கோடி ரூபாய்  கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. ‘அய்யோ பாவம், அந்த ஏழைகளால்’ திருப்பிச் செலுத்த முடிய வில்லை என்பதுபோல் அந்த கடன் தள்ளுபடி  செய்யப்பட்டது. இதுதான் நாட்டில் நடக்கிறது. நாடு பெரிய அளவில் பின்னோக்கி செல்கிறது. அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சி கூட சரியான  அளவில் இல்லை. பட்டினியின் உச்சநிலையில் 121 நாடுகளில் இந்தியா 117ஆவது இடத்தில் உள்ளது. மாநிலங்களை பொருளாதார ரீதி யாக முடக்கும் நிலைப்பாட்டை ஒன்றிய அரசு எடுத்து வருகிறது. சமூக நல ஓய்வூதியம் தரக் கூடாது என்று ஒன்றிய அமைச்சர் ஒருவர் கூறு கிறார். கேரளம் எதையும் ஏற்கப் போவ தில்லை. பட்டினியால் வாடாத பல்லாயிரக்கணக் கானோர் இங்கு உள்ளனர். இது போன்ற நலத்திட்டங்கள் இல்லாவிட்டால் அவர்கள் பட்டினி கிடப்பார்கள். மக்களை பட்டினி போடு வதற்கு அல்ல நமது அரசு. நாட்டின் கூட்டாட்சி முறையை தகர்க்கும்  அணுகுமுறையை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. நாட்டில் நடப்பது  கூட்டாட்சிக் கோட்பாட்டை மீறும் செயல்களா கும். மாநிலங்களின் அதிகாரத்தை அபகரிக்க ஒன்றிய அரசு முயல்கிறது. கல்வித் துறையில் ஒன்றிய அரசின் திட்டமிட்ட தலையீடு உள்ளது. கல்வி என்பது பொதுவாக மாநில விவகாரம். இதில் ஒன்றிய அரசும் தலையிட முடியும்.  எதிர்கால தலைமுறையை குறிவைத்து, குழந்தைகளின் மனதில் வகுப்புவாத விஷத்தை விதைக்க கல்வி பயன்படுத்தப்படுகிறது. பாடப் புத்தகம், பாடத்திட்டம் மற்றும் பயிற்று முறை கள் அனைத்தும் அதற்கேற்ப மாற்றப்படு கின்றன. பல மாநிலங்களில் உயர்கல்வியில் ஆளுநர்கள் தலையிட்டுள்ளனர். கல்வித்துறை யை காவிமயமாக்கி இளம் தலைமுறையினர் மீது வகுப்புவாதம் திணிக்கப்படுகிறது. இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.