சென்னை, ஏப்.30- திமுக எதிர்க்கட்சி வரிசையில் இருந்தால், தொழிலாளர்களின் உரிமை களுக்காக தொடர்ந்துப் போராடி யுள்ளதாகவும் ஆட்சியில் இருக்கும் போது, அவர்களுக்கான உரிமை களைப் பேணும் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்துவதாகவும் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள் ளார். மே தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு உழைக்கும் தோழர்களின் உன்ன தத்தை உலகுக்கே எடுத்துரைக்கும் மே நன்னாளாம் இந்தப் பொன்னாளில், நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத் திற்கும் முதுகெலும்பாகத் திகழும் தொழிலாளத் தோழர்களுக்கும், அவர் தம் குடும்பத்தினருக்கும் எனது இதயம் நிறைந்த உழைப்பாளர் நாள் நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கி றேன். திமுக ஆட்சிப் பொறுப் பேற்கும் போதெல்லாம் பல்வேறு தொழிலாளர் நலத்திட்டங்களை அக்கறையோடு நிறைவேற்றி, தொழிலாளர் வாழ்வில் முன்னேற்றமும், நிம்மதியும் காண அய ராது பாடுபடும் இயக்கம் என்பதை உழைப்பாளர் சமுதாயம் நன்கு அறியும். எதிர்க்கட்சி வரிசையில் இருந்தால், தொழிலாளர்களின் உரிமை களுக்காக தொடர்ந்துப் போராடி யிருக்கிறோம். ஆட்சியில் இருக்கும் போது, அவர்களுக்கான உரிமை களைப் பேணும் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்துகிறோம். மே தினத்திற்கு ஊதியத்தோடு கூடிய அரசு விடுமுறை. தொழிலாளர்களுக்கு 20 விழுக்காடு போனஸ், ஊக்கத் தொகை, நிலமற்ற ஏழை வேளாண் தொழிலாளர் குடும்ப ங்களுக்கு இலவச நிலம், வேளாண் கூலிகளாகவும், வேறுபல தொழில்க ளில் உழைப்பாளிகளாகவும் திகழும் ஏழை, எளிய கருவுற்ற பெண்களுக்கு 6000 ரூபாய் நிதியுதவி, தொழிலாளர் குடும்பங்களின் பசிப்பிணி போக்கிட ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, உழைப்பாளர்களின் உயிர்காக்கும் கலைஞர் காப்பீட்டுத் திட்டம், குடிசை களில்லா கிராமங்கள், குடிசைப் பகுதி களில்லா நகரங்கள் கொண்ட தமிழ் நாடு காணும் கலைஞர் வீடு வழங்கும் திட்டம், அமைப்பு சாராத் தொழிலாளர் நல வாரியங்கள் என பல்வேறு திட்டங் களை உழைக்கும் சமுதாயத்தின் நலனுக்காக நிறைவேற்றியது தி.மு.க ஆட்சிதான் என்பது வெள்ளிடை மலை. அந்த உறுதிப்பாடு குலையாமல் தொழிலாளர் நலன் காக்க, திமுகவும், அதன் அரசும் என்றென்றும் பாடு படும் என்பதை இந்த நன்னாளில் தெரி வித்து, உழைக்கும் தோழர்கள் அனை வருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.