tamilnadu

img

நெல்லையில் ‘பொருநை அருங்காட்சியகம்’

சென்னை, மே 18- திருநெல்வேலியில் ரூ.33  கோடியில் அமைய விருக்கும் பொருநை அருங்காட்சியக கட்டு மானப் பணிகளை சென்னை  தலைமைச் செயலகத்தி லிருந்து காணொலிக் காட்சி மூலமாக முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வியாழனன்று (மே 18) துவக்கி வைத்தார். நடந்து முடிந்த சட்டப் பேரவை கூட்டத்தொடரில், நெல்லை மாநகரில் பொருநை நாகரிகத்தை மையப்படுத்தி பொருநை நாகரிகத்தின் அடிநாதமாக இருக்கும் தாமிரபரணி ஆற்றின் கரையில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் ஆதிச்ச நல்லூர், கொற்கை, சிவ களையில் அகழாய்வு மூலம் கிடைத்த பல்வேறு  பொருட்களை காட்சிப் படுத்தும் வகையில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக் கப்படும் என்று முதல மைச்சர் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம்  நெல்லையில் அருங்காட்சி யகம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யும் பணியில் தொல்லியல் துறை அதி காரிகள் ஈடுபட்டு வந்தனர். பிறகு, பாளை கே.டி.சி.  நகரில் இருந்து கன்னியா குமரி செல்லும் 4 வழிச்சாலையில் ரெட்டி யார்பட்டி மலைப்பகுதியில் பொருநை அருங்காட்சி யகம் அமைக்க முடிவு செய்து அந்த இடத்தை அமைச்சர் தங்கம் தென்ன ரசு பார்வையிட்டு ஆய்வு செய்தார். மொத்தம் ரூ.33.02  கோடியில் அமைக்கப்பட விருக்கும் இந்த அருங் காட்சியகத்திற்கு 13 ஏக்கர்  பரப்பளவில் இடம் கையகப்படுத்தப்பட்டது. உலகத்தரத்தில் அமைய  உள்ள இந்த அருங்காட்சி யகத்திற்கான கட்டுமான பணிகளுக்கு காணொலி காட்சியின் மூலம் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம்தென்னரசு, தலை மைச் செயலாளர் வெ. இறை யன்பு மற்றும் உயர்  அதிகாரிகள் கலந்து கொண்டனர்.