tamilnadu

img

இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு ஜார்க்கண்ட் மாநில அரசின் மசோதாவை கிடப்பில் போட்ட ஆளுநர்!

ராஞ்சி, டிச.21- ஜார்க்கண்ட் மாநிலத்தில் இதர பிற்படுத் தப்பட்டோருக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை- அம் மாநில ஆளுநர் ரமேஷ் பயாஸ் ஒப்புதல் அளிக்  காமல் கிடப்பில் போட்டுள்ளார்.  இதனையடுத்து ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், மாநிலத்தின் அனைத்து அர சியல் கட்சித் தலைவர்களையும் அழைத்துக் கொண்டு ராஜ் பவனில் ஆளுநர் ரமேஷ் பயாஸை நேரில் சந்தித்து மசோதாவுக்கு ஒப்புதல் தர வலியுறுத்தியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சட்டப்பேர வைத் தேர்தல் நடைபெற்றபோது மாநிலத்தில்  இடஒதுக்கீட்டின் அளவை அதிகரிப்போம் என்று ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கி ரஸ் கூட்டணி வாக்குறுதி அளித்தது. அதன்படி கடந்த நவம்பர் 11 அன்று ஜார்க்  கண்ட் மாநிலத்தில், இடஒதுக்கீட்டு உச்ச வரம்பை 77 சதவிகிதமாக உயர்த்தி,

அம்மாநில ஹேமந்த் சோரன் அரசு சட்டம் கொண்டு வந்தது. இதற்காக, சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, ‘ஜார்க்கண்ட் அரசுப் பணி  காலியிடங்கள் மற்றும் பணிகள் திருத்த மசோதா-2022’வை முதல்வர் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்தார்.  இந்த புதிய மசோதா மூலம், பட்டியல் வகுப்பினருக்கான இடஒதுக்கீடு 12 சதவிகித மாகவும், பழங்குடியினருக்கான ஒதுக்கீடு  28 சதவிகிதமாகவும் தலா 2 சதவிகிதம்  உயர்த்தப்பட்டது. இதர பிற்படுத்தப்பட்டோ ருக்கு 12 சதவிகிதமும், இதர பிற்படுத்தப்  பட்டோரில் புதிதாக மிகவும் பிற்படுத்தப்பட் டோர் (Extremely Back ward Classes  -EBCs) என்ற புதிய பிரிவை உருவாக்கப்பட்டு,  அதற்கு தனியாக 15 சதவிகிதமும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. முந்தைய பாஜக அரசு, இதர பிற்படுத்தப் பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 27 சதவிகி தத்தில் இருந்து 14 சதவிகிதமாக குறைத்து இருந்தது. ஆனால், ஹேமந்த் சோரன் அரசு பிற்படுத்தப்பட்டோருக்கு 12 சதவிகிதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 15 சதவிகி தம் என இடஒதுக்கீட்டு அளவை மீண்டும் 27 சத விகிதமாக உயர்த்தியது. பட்டியல் - பழங்குடி யினருக்கும் தலா 2 சதவிகிதம் இடஒதுக்கீட்டை உயர்த்தி, ஒட்டுமொத்தமாக 77 சதவிகிதமாக அதிகரித்தது.

இந்த மசோதாவுக்கு பாஜக மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தது. இடஒதுக்கீடு விஷ யத்தில், ஹேமந்த் சோரன் அரசு தேவையற்ற அவசரம் காட்டுவதாகவும், உயர்சாதி ஏழை களுக்கு (EWS) இடஒதுக்கீடு வழங்கவில்லை என்றும் கூறியது. ஆனால், பாஜக எதிர்ப்பை யும் மீறி, ஹேமந்த் சோரன் அரசு 77 சத விகித இடஒதுக்கீட்டு மசோதாவை நிறை வேற்றியது. அத்துடன், தமிழகத்தில் நடைமுறையில்  இருக்கும் 69 சதவிகித இடஒதுக்கீடு, அரசியல் சாசனத்தின் 9-வது  அட்டவணையில் சேர்க் கப்பட்டு பாதுகாக்கப்பட்டு இருப்பதுபோல, ஜார்க்கண்டில் கொண்டு வரப்பட்டுள்ள 77 சதவிகித இடஒதுக்கீட்டையும் 9-ஆவது அட்ட வணையில் சேர்த்து பாதுகாப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்தார். இந்நிலையில்தான், ஜார்க்கண்ட் மாநில அரசு மசோதா நிறைவேற்றி 2 மாதங்களாகியும் அம்மாநில ஆளுநர் இதுவரை 77 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் தராமல் இருப்  பது விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கி றது.  இதுதொடர்பாக ஜார்க்கண்ட் மாநில அரசியல் கட்சித் தலைவர்களுக்கு முதல்வர் ஹேமந்த் சோரன் கடிதம் எழுதி, ஆளுநரின் ஒத்துழையாமை குறித்து விவரித்து இருந்தார். இதன் அடுத்தகட்டமாக அனைத்துக் கட்சி  குழுவினரை ராஜ்பவனுக்கே அழைத்துச்  சென்று, ஆளுநர் ரமேஷ் பயாஸை சந்தித் துள்ளார். ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 77 சதவிகித இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.