மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுக: சிபிஎம்
மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மணிப்பூரில் மிகப் பெரிய அளவில் நடைபெற்றுவரும் வன்முறை மற்றும் இனக் கலவரங்கள் மிகவும் ஆபத்தான அளவிற்குச் சென் றுள்ளன. வீடுகள் நாசமாக்கப்படுதல், சொத்துக்கள், தேவாலயங்கள், கோவில்கள் ஐந்து மாவட்டங்களில் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன. மோதல்களில் எண்ணற்றவர்கள் இறந்திருக்கிறார்கள். மத்திய துணை ராணுவம் மற்றும் ராணுவம் வந்தபின்னர், நிலைமை யில் சற்றே கட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது என்ற போதிலும், இன்னமும் சம்ப வங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. பலர் வெளிவர முடியாமல் தங்கள் வீடுகளுக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான வர்கள் தங்கள் வீடுகளிலிருந்து இடம் பெயர்ந்திருக்கிறார்கள்.
இதுபோன்ற நிலைமை உருவாகும் என்பதை முன் உணர்ந்து துரிதமாக செயல்படுவதில் பாஜக மாநில அரசாங்கம் தோல்வி அடைந்துவிட்டது. சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதற்குத் தலையிட முயற்சிப்பதைத் தாம தித்தது. வனங்களைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் மலைப் பகுதிகளிலி ருந்து பெரிய அளவில் மக்களை வெளியேற்ற அரசாங்கம் எடுத்த நடவடிக்கையும், ‘வெளியாட்களை’ வெளியேற்றுகிறோம் என்ற பெயரில் மக்களை வெளியேற்றப்போகிறோம் என்று கூறிவந்ததும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. இது மலை மாவட்டங்களில் விரிவான அளவில் கிளர்ச்சிப் போராட்டங்களுக்கு இட்டுச்சென்றன. இவ்வாறு கூர்மையான முறையில் வன்முறை மோதல்கள் ஏற்பட இட்டுச்சென்ற பிரச்சனைகளை சமாளிப்பதற்கு முன்பு அங்கே அமைதியையும், இயல்பு நிலைமையையும் ஏற்படுத்துவது உடனடிக் கடமையாகும். மாநில அரசாங்கம், ஒன்றிய அரசாங்கத்தின் உதவியுடன், புலம்பெயர்ந்துள்ள மக்கள் அனைவருக்கும் மறுவாழ்வு அளித்திட அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திட வேண்டும். நிலைமையைச் சமாளித்திட ஓர் ஒன்றுபட்ட முயற்சியை மேற் கொள்ள வேண்டும். இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது. (ந.நி.)
இம்பால், மே 6- மணிப்பூரில் அமைதியை ஏற் படுத்துவதற்காக முதல்வர் பைரன் சிங் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கி ரஸ், சிபிஎம், நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி, ஆம் ஆத்மி, சிவ சேனா உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன.
54 பேர் பலி
வடகிழக்கு மாநிலமான மணிப் பூர், ஏப்ரல் 3 அன்று துவங்கி கடந்த 4 நான்கு நாட்களாக கலவரக் காடாக மாறிய நிலையில், இந்த கலவரத்தில் இதுவரை 54 உயிர்கள் பறிபோயி ருக்கின்றன. ஆயிரக்கணக்கான குடி யிருப்புகள், வணிக நிறுவனங்கள், வாகனங்கள், வழிபாட்டுத் தலங்கள், பள்ளிக்கூடங்கள் தீக்கிரையாகிவிட்டன. வன்முறை பரவாமல் தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் இணையச் சேவைகள் துண்டிக்கப் பட்டு, 144 தடையுத்தரவு பிறப்பிக் கப்பட்டுள்ளது. கலவரக்காரர் களைக் கண்டதும் சுட உத்தரவு பிறப் பிக்கப்பட்டு உள்ளது. எனினும் பதற்றம் முழுமையாகத் தணியாத நிலையில், ஒன்றிய அர சின் உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் நிலவரம் பற்றி அதிகாரி களுடன் ஆலோசித்தார்.
355 ஆவது பிரிவு
இதன் பின்னணியில், அரசியல மைப்புச் சட்டத்தின் பிரிவு 355 மணிப்பூரில் அமல்படுத்தப்படுவ தாக ஒன்றிய அரசு அறிவித்தது. ஒரு மாநிலத்திற்குள் கட்டுப்படுத்த முடி யாத அளவிற்கு வன்முறைச் சம்ப வங்கள் அரங்கேறும் சூழலில் ஒன் றிய அரசு தலையிடுவதற்கு சிறப்பு அதிகாரம் வழங்குவதே அரசியல மைப்புச் சட்டம் 355 ஆகும். மேலும், மணிப்பூரில் நிலைமை யைக் கட்டுப்படுத்த கூடுதல் தலை மை இயக்குநர் (உளவுத்துறை) அசு தோஷ் சின்ஹா ஒட்டுமொத்த செயல் பாட்டுத் தளபதியாக நியமிக்கப்பட் டார். பாதுகாப்பு ஆலோசகராக முன் னாள் டிஜிபி குல்தீப் சிங் நியமிக்கப் பட்டார். விரைவு நடவடிக்கை படை (RAF), எல்லைப் பாதுகாப்புப் படை (BSF), மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) உள்ளிட்ட ஆயுதப் படைகள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டன. கூடுதல் பாதுகாப்பிற்காகவும் இந் திய ராணுவம் மற்றும் அசாம் ரைபிள் படை பிரிவுகளும் வரவழைக்கப் பட்டன. தற்போதைய சூழலில் மணிப்பூர் மாநிலத்தில் வன்முறைப் பகுதியில் இருந்து 20 ஆயிரம் பேர் வெளி யேற்றப்பட்டு உள்ளனர். மேலும் 600-க்கும் அதிகமானவர்கள் அண்டை மாநிலங்களில் தஞ்சம் அடைந்துள்ள னர். தொடர்ந்து மக்கள் வெளியேற தொடங்கி உள்ளனர். மணிப்பூர் கலவரம் எதிரொலி யாக 5,751 தேர்வர்கள் பங்கேற்கும் நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை தள்ளி வைத்துள்ளது.
“சுராசந்த்பூர், கேபிஐ, மோரே மற்றும் கச்சிங் ஆகிய பகுதிகளில் இரண்டு நாட்களாக பெரிய வன் முறை எதுவும் இல்லாமல் உறுதி யான கட்டுப்பாட்டில் உள்ளன” என்று மணிப்பூர் டிஜிபி பேட்டி ஒன்றில் கூறி னார். இதனிடையே, சட்டம் - ஒழுங்கு விவகாரத்தை ஆயுதப்படைகள் மூல மாக மட்டும் கையாளாமல், மாநி லத்தின் இயல்பான அமைதியை கொண்டு வருவதற்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகளை துவங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசி யல் கட்சிகள் கோரிக்கை விடுத்த நிலையில், சனிக்கிழமையன்று முதல்வர் பைரன் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடை பெற்றது. இதில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆம் ஆத்மி, சிவ சேனா, தேசிய மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணி உள்ளிட்ட அரசி யல் கட்சிகள் கலந்து கொண்டன.