tamilnadu

img

விபத்துகளை தடுக்க ஆலோசனை: சிறுமிக்கு முதலமைச்சர் வாழ்த்து

சென்னை, மார்ச் 18- விபத்துகளை தடுக்க ஆலோசனை வழங்கிய சிறுமிக்கு முதலமைச்சர் வாழ்த்து கடிதம் அனுப்பி யுள்ளார். இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் விபத்துகள்  ஏற்பட்டு வருவதால் அதனை தவிர்த்திடும் வகையில் கால்நடைக ளுக்கு இரவில் பிரதிபலிக்கும் தோடு  அல்லது வில்லைகளை வழங்க வேண்டும். எனது கோரிக்கை  பயனுள்ளதாக இருப்பின் வாழ்த்து மடல் அனுப்ப வேண்டும் என்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் 7ஆம் வகுப்பு பயிலும் மாணவி நா.சல.லயஸ்ரீ  முதலமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார்.   சமூக அக்கறையுடன் ஆலோசனை வழங்கிய மாணவி லயஸ்ரீயை பாராட்டி தமிழ்நாடு முதல மைச்சர், இரவு நேரங்களில்  சாலைகளில் ஏற்படும்  விபத்துகளையும், உயிர்ச்சேதங் களையும் தடுப்பதற்கு கால்நடைக ளுக்கு இரவில் ஒளிரும் காதணி  அல்லது வில்லைகளை அணிவிப் பது சிறந்த நடைமுறையாக இருக்கும் என்று தெரிவித்து சமூக விழிப்புணர்வினை ஏற்படுத் தியதற்காகவும், சிறு வயதிலேயே அவர் மேற்கொண்டுள்ள இந்த செயலை பாராட்டியும் வாழ்த்துக் கடிதம் எழுதியுள்ளார்.