tamilnadu

img

முதல்வர் பைரேன் சிங் பதவி விலக வேண்டும்!

கொலை, கொள்ளை, பாலியல் வன் முறைகள், கடத்தல், தீவைப்பு. இதுதான் மணிப்பூர். கடந்த ஒன்றரை வரு டங்களாக இந்த கொடுமைகளால் முற்றுகை யிடப்பட்டுள்ள அந்த மாநில மக்கள் நிம்மதி இழந்து தவிக்கின்றனர். பாஜக தலைமை யிலான ஒன்றிய, மாநில அரசுகளின் உதவி யற்ற அக்கறையற்ற தன்மையே இதற்கு முழு காரணமாகும்.

கொந்தளிக்கும் மக்கள் 

ஆளும் பாஜக கூட்டணிக்கு எதிரான மக்க ளின் கோபம் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. அறுபது உறுப்பினர்களைக் கொண்ட சட்ட சபையில் 7 எம்எல்ஏக்களை கொண்ட தேசிய மக்கள் கட்சி (NPP) மாநில அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளது. முத லமைச்சர் என். பைரேன் சிங்  தலைமையிலான பாஜக அரசு நெருக்கடியை தீர்க்கவும், இயல்பு நிலையை மீட்டெடுக்கவும் முற்றிலும் தவறி விட்டது என்று அந்த கட்சி மிகச் சரியாகக் கூறியுள்ளது. குறட்டை விட்டு தூங்கும் பாஜக அரசு  என் பி பி கட்சி ஆதரவை விலக்கியது அரசாங்கத் திற்கு எவ்வித அச்சுறுத்தலையும் ஏற்படுத் தாது. ஏனெனில் அது வசதியான பெரும்பான்மை பெற்றுள்ளது.  குறட்டை விட்டு தூங்கிக் கொண்டுள்ள பாஜக வை தட்டி  எழுப்பவாவது இது உதவும். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடர்ந்து இரண்டு நாட்கள் மாநிலத்தில் பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்தார். அதே நேரத்தில் முதல்வர் பைரேன், பதவியில் தன்னை உறுதிப்படுத்திக் கொள்ளும் முயற்சி யில் ஆளும் கூட்டணியின் அமைச்சர்கள் மற்றும் பிற எம்எல்ஏக்களுடன் ஒரு கூட்டத்தை நடத்தினார்.

கடமை தவறிய மோடி!  வேடிக்கை பார்க்கும் அமித்ஷா!

உலகையே சுற்றி வந்து கலக்குகின்ற  பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு ஏற்பட்ட  குழப்பங்களுக்கு பிறகு அந்த மாநிலத்திற்கு இதுவரை வராதது குறிப்பிடத்தகுந்தது. சிஆர்பிஎஃப்  பிற பாதுகாப்பு படைகளை தன்வசம் வைத்துள்ள  அமித்ஷா மிக மோசமான நிலையை கட்டுக்குள் கொண்டு வரவும் தவறிவிட்டார். பைரேனைக் காப்பாற்றும் பாஜக பைரேன் சிங் செயல்பாடுகளில் வெளிப்படை யான குறைபாடுகள் இருந்தபொழுதும், அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல்கள் எழுந்த போதும் பாஜக அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையை குறைக்கவில்லை. பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் வீடுகள் பற்றி எரிந்து கொண்டுள்ள நிலையில் செயலற்றுப் போன முதல்வரை கையில் ஏந்தி பாதுகாப்பதை பாஜக கட்சி நிறுத்த வேண்டும். பதவியை விட்டு அவரை வெளியேற்ற வேண்டும்.  அன்று மோடி! இன்று பைரேன் சிங்! கடந்த காலத்தில் 2002 ஆம் ஆண்டில் குஜராத் கலவரங்களுக்கு பிறகு மாநில முதலமைச்சர் நரேந்திர மோடியை பதவி நீக்கம் செய்வதற்கு அன்றைய பிரதமர் வாஜ்பாய் நெருங்கி வந்தார். இப்போது பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் பைரேன்சிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டும்!

தமிழில்: கடலூர் சுகுமாரன்
நன்றி : ட்ரிபியூன் நாளிதழ் தலையங்கம்