சென்னை,பிப்.13- தமிழ்நாடு அரசு நடைமுறைப் படுத்திவரும் முத்திரைப் பதிக்கும் முத்தான திட்டங்கள் தொடர்பான முதலாவது ஆய்வுக் கூட்டம் கடந்த பிப்.9 அன்று நடைபெற்றது. அக்கூட்டத் தில் 13 துறைகள் தொடர்பான முத்தான திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, திங்கட்கிழமை (பிப்.13) தலைமைச் செயலகம், நாமக் கல் கவிஞர் மாளிகை, 10-வது தளத்தி லுள்ள கூட்ட அரங்கில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் முத்தான திட்டங்கள் தொடர்பான இரண்டாவது ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் நிறைவாக பேசிய முதல்வர் ஸ்டாலின், “ அரசு நிர்வாகம் என்பது, நாம் அனைவரும் சேர்ந்திழுக்கும் தேராகும்; அதை விரைவாகச் செய்தால், நிர்வாகம் நேராகும். தேர் நிலையிலேயே இருப்ப தற்காக செய்யப்பட்டதல்ல – திட்டங்கள், காகிதத்தில் இருப்பதற்காக வரையப்பட்டதல்ல.நீங்கள் செயல்வீரர்களாக செயல்பட வேண்டும் சார்-நிலை அலுவலர்களது பணிகளை நீங்கள் தொடர்ந்து ஆய்வு செய்யுங்கள். தொடர்ச்சியான ஆய்வுகளே, தொய் வில்லாத நிர்வாகத்தை உருவாக்கும்.” என்றார்.
பொதுவாக, திட்டங்களை அதிகாரி களின் குழந்தைகள் என்று சொல் வார்கள். அதிகாரிகள் கவனித்துப் பேணிக் காத்தால், அவை வளரும். அதி காரிகள் கவனிக்கத் தவறினால், அவை மெலியும். ஆனால், நமது மாநிலத் தில், பல துறைகளில், பல திட்டங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.இவ்வாறான செயல்பாடுகளே, மக்களுக்கான பொற்காலமாக அமையும். அத்தகைய பொற்காலத்துக்கான அடித்தளத்தை உருவாக்கத் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறோம் என்றும் அவர் கூறினார். சில திட்டங்களில் காணப்படும் தொய்வினையும், சுணக்கத்தையும் கவனித்தேன். அவற்றைச் சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பும், கடமையும் எனக்கு இருக்கிறது. அவற்றை நிறை வேற்றுவதற்கு எந்தளவு கால நிர்ண யம் செய்யப்பட்டுள்ளதோ, அதற்குள் ளாக முழுமையாக நிறைவேற்றிட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் இளை ஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.