tamilnadu

img

இலக்கியம்தான் மனிதனைப் பண்படுத்தும்

சென்னை,ஜன.6- “இலக்கியம் தான் மனிதனை பண்படுத்தும் என்று முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை கோட்டூர்புரம் அண்ணா  நூற்றாண்டு நூலகத்தில் சென்னை  இலக்கிய திருவிழா-2023 வெள்ளி யன்று (ஜன.6) துவங்கியது. 3 நாட்கள்  நடைபெறும் இந்த விழாவை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி  வைத்தார். பிறகு, அங்கு காட்சிப் படுத்தப்பட்டிருந்த இலக்கிய படைப்பு களையும் அவர் பார்வையிட்டார். இதில் இரு நூற்றாண்டு கால மாக பயன்படுத்தப்பட்ட தமிழர் பண்பாட்டு நாணயங்கள், அச்சு பயன்பாடு எந்த அளவில் இருந்தது  என்பதை விளக்கும் வகையிலான படைப்புகள் ஏராளமாக காட்சி படுத்தப்பட்டிருந்தது. இவை அனைத் தையும் பார்வையிட்டார். இந்த விழாவில் 100 நூல்களை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

இன்று வெளியிடப்பட்ட புத்த கங்கள் அனைத்தும் தமிழின் பெரு மையை, தமிழின் செழுமையை, தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றை,  சமூக வரலாற்றை, தமிழ்ப் பண்பாட்டை, தமிழ்நாட்டை இன்றைய  தலைமுறைக்கு கற்பிக்கும் புத்தகங்க ளாக அமைந்துள்ளன. மொழியைப் பற்றால் மட்டும் வளர்த்துவிட முடியாது. அறிவால், உணர்வால் வளர்த்தாக வேண்டும். அதற்காகத்தான் இத்தகைய இலக்கிய  விழாக்களை நாம் நடத்துகிறோம். இன்றைய இளைய தலைமுறைக்கு தமிழ் உணர்வை ஊட்டியாக வேண்டும். தமிழ் இலக்கிய உணர்வை  ஊட்டியாக வேண்டும். இலக்கியம் தான் ஒரு மனிதனை பண்படுத்தும். மதவாதத்தாலும், சாதியவாதத்தாலும், மனிதர்களுக்குள் பிளவு ஏற்படும்போது- ‘பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும்’என்ற திருவள்ளு வரின் ஒரு வரி மனிதனை ஒன்றாக்கும்.  யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வரி, மனித சமுதாயத்துக்குள் இருக்கும் அத்தனை வேறுபாடு களையும் துடைத்தெறியும்.

‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்ற வரி கல்நெஞ்சத்தையும் கரைக்கும்!  தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தம் மெய் வருத்தக் கூலி தரும்-என்பதை விட தன்னம் பிக்கை வரி உலகத்தில் உண்டா? இத்தகைய படைப்புகள் தமிழர்களால் அதிகம் படிக்கப்பட வேண்டும். அதற்கு இளமைக்காலத்தில் இருந்தே மாணவ சமுதாயத்துக்கு தமிழ் மீதும், தமிழ் இலக்கியங்கள் மீதும் தீராத ஆர்வத்தை உருவாக்க வேண்டும். படைப்பரங்கம், பண்பாட்டரங்கம், பயிலரங்கம், குழந்தைகள் இலக்கிய அரங்கம், நிகழ்த்துக் கலைகள் என  மிக விரிவாக ஏற்பாடு செய்யப் பட்டுள்ள இது போன்ற திருவிழாக்கள் இலக்கிய ஆர்வத்தை உருவாக்க உறுதுணையாக அமையும். வரலாற்றை படித்தவர்களால் தான் வரலாற்றைப் படைக்க முடி யும். இலக்கியம் படித்தால் தான் நாம் வாழும் சமுதாயத்தை உணர முடி யும். இலக்கியம் என்பது பொழுது போக்கு அல்ல, அதுதான் நமது நோக்கும் போக்குமாக மாற வேண்டும். இலக்கியம் என்பது பேரியக்க மாக மாற வேண்டும். புத்தகக் கண் காட்சிகள் மாவட்டந்தோறும் பரவி நடப்பதைப் போல இலக்கிய விழாக்க ளும் மாவட்டந்தோறும் பரவி நடைபெற வேண்டும். இது கூடி கலை யும் கூட்டம் அல்ல, கூடிப்படைக்கும் கூட்டம். இவ்வாறு அவர் பேசினார். இதில் அமைச்சர்கள் பி.கே. சேகர்பாபு,அன்பில் மகேஸ் பொய்யா மொழி, தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி, மேயர் பிரியா, பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காகர்லாஉஷா மற்றும்  இலக்கிய படைப்பாளிகள் ஏராள மானோர் பங்கேற்றனர்.