சென்னை,ஜன.31- அலகாபாத் மூத்த நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி சென்னை உயர்நீதி மன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக கடந்த நவம்பர் மாதம் நியமிக்கப் பட்டார். இதையடுத்து அவர் கடந்த நவம்பர் 22 ஆம் தேதி பொறுப்பு நீதி பதியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவ ருக்கு, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிலையில், அவரை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழு முடிவு செய்துள்ளது. உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழுவின் கூட்டம் கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி மற்றும் கடந்த 29 ஆம் தேதி நடந்தது. அப்போது இந்த முடிவை நீதிபதிகள் எடுத்துள்ளனர். பின்னர், இதுதொடர்பான பரிந்து ரையை ஒன்றிய அரசுக்கும் குடியரசுத் தலைவருக்கும் அனுப்பியுள்ளனர். எனவே விரைவில் சென்னை உயர்நீதி மன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள முனீஸ்வர் நாத் பண்டாரி, உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலை தங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி வருமாறு:- வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதி பதியாக பொறுப்புயர்வு பெற்றுள்ள நீதிபதி முனீஸ்வரர் நாத் பண்டாரிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நீதி நிர்வாகத்தில் தங்களது அனைத்து முயற்சிகளுக்கும் துணை நிற்க எனது அரசு உறுதிபூண்டுள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.