tamilnadu

குடியரசு தினத்தில் விடுதலைப் போராளிகளின் ரத ஊர்வலம்

சென்னை,ஜன.23- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் ஆகி யோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: குடியரசு தினமான ஜனவரி-26 அன்று தில்லியில் நடைபெற உள்ள அணிவகுப்பில் பங்கேற்க, தமிழ்நாட்டின் சார்பில் விடுதலைப் போராளிகள் வ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதியார், வீரமங்கை வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆகியோர் உருவம் பொறித்த ரதத்திற்கு ஒன்றிய மோடி அரசு  அனுமதி மறுத்துள்ளது.   பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீரச்சமர் புரிந்த விடுதலைப் போராளிகளின் உருவங்கள் பொறித்த ரதத்தை ஒன்றிய அரசு மறுத்துள்ளது என்பது தமிழகத்தையும், தமிழக மக்களையும் அவ மதிப்பது போன்றதாகும்.  ஒன்றிய அரசின் இந்த தரம் தாழ்ந்த நடவடிக்கையை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வன்மை யாகக் கண்டிக்கிறது. ஒன்றிய பாஜக அரசின் இத்தகைய மோச மான நடவடிக்கை இந்திய அரசியலமைபுச் சட்டம் உறுதிப்படுத்தியுள்ள கூட்டாட்சி தத்து வத்தை சிதைப்பதுடன் மாநிலங்களின் உரிமைகளையும் பறிப்பதாகவுள்ளது.  எனவே, ஒன்றிய அரசின் அராஜக நட வடிக்கையை கண்டித்தும், தங்களது உயிரை யும் உடமைகளையும் இழந்து இந்திய விடு தலைக்காகப் போராடிய விடுதலைப் போராளிகளின் தியாகத்தை உயர்த்திப் பிடிக்கும் வகையிலும் குடியரசு தினமான ஜனவரி 26 அன்று வ.உ.சிதம்பரனார், மகாகவி  பாரதியார், வீரமங்கை வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் உருவம் பொறித்த முக மூடி அணிந்து, அவர்களது உருவம் தாங்கிய ரத ஊர்வலம் நடத்துவது என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் முடிவெடுத்துள் ளது.

சிறுவர் ரியாலிட்டி ஷோ திரையிடல்

அது போல, கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் வகையில் செயல்படும் ஒன்றிய அரசு மற்றும்  பாஜகவின் நட வடிக்கைக்கு எதிராக, சிறுவர்கள் ரியாலிட்டி ஷோவை மாநிலம் முழுவதும் திரையிட வும், இந்நிகழ்வுகளின் நிறைவாக “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப் போம், மாநில உரிமைகளை மீட்டெடுப் போம்” என்று உறுதியேற்பும் நடைபெற வுள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.